செய்திகள் :

கார் பந்தயம்: நடிகர் அஜித்குமார் கார் டயர் வெடித்தது

post image

ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் ஓட்டிச்சென்ற காரின் டயர் வெடித்ததால் பரபரப்பு நிலவியது.

நெதர்லாந்தில் ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயம் மே 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித்குமார் போர்ஷியா அணி சார்பில் பங்கேற்றார்.

இந்தப் போட்டியின் இரண்டாவது சுற்று இன்று தொடங்கியது. இந்த நிலையில் அஜித்குமார் ஓட்டிச்சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 30 மாவட்டங்களில் மழை!

இதனால் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்தில் நடிகர் அஜித்குமாருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தகவல் தெரியவந்துள்ளது.

கார் ட்ராக் சர்க்யூட்டில் நின்ற பிறகு, டயர் மாற்றப்பட்டு மீண்டும் பந்தயத்தில் அஜித் பங்கேற்றார்.

இரவில் 31 மாவட்டங்களுக்கு மழை! வானிலை மையம் வெளியிட்ட செய்தி!

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம்: விஜய்

உலகெங்கிலும் உள்ள தொப்புள்கொடி உறவுகளுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி விஜ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 30 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

கொடைக்கானலில் மே 24ல் மலர்க் கண்காட்சி தொடக்கம்

கொடைக்கானலில் வரும் மே 24ஆம் தேதி 62வது மலர்க் கண்காட்சி தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் களை கட்டியதைத் தொடா்ந்து தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிக... மேலும் பார்க்க

5.66 சதவீதம் உயர்ந்த வேளாண் வளர்ச்சி: தமிழ்நாடு அரசு பெருமிதம்

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பின் 5.66 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத... மேலும் பார்க்க

சாத்தான்குளம் விபத்து: கனிமொழி எம்.பி. நேரில் ஆறுதல்

சாத்தான்குளம் அருகே கிணற்றில் ஆம்னி வேன் விழுந்ததில் பலியானோரின் உறவினர்களை சந்தித்து கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்... மேலும் பார்க்க