செய்திகள் :

ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!

post image

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: தோனியின் ரசிகர்கள் ’தானா சேர்ந்த கூட்டம்!’ - ஹர்பஜன் சிங் புகழாரம்

நேஹல் வதேரா, ஷஷாங் சிங் அரைசதம்

முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. பிரியன்ஷ் ஆர்யா 9 ரன்களிலும், மிட்செல் ஓவன் 0 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பிரப்சிம்ரன் சிங் 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். 34 ரன்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நேஹல் வதேரா இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. ஷ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், நேஹல் வதேராவுடன் ஷஷாங் சிங் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அபாரமாக விளையாடியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர்.

நேஹல் வதேரா 37 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஷஷாங் சிங் 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதையும் படிக்க: வீரர்கள் அவர்களை நன்றாக புரிந்துகொண்டால்.... என்ன சொல்கிறார் ராகுல் டிராவிட்?

ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குவெனா மபாகா, ரியான் பராக் மற்றும் ஆகாஷ் மத்வால் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பஞ்சாப் கிங்ஸ் வெற்றி

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். ராஜஸ்தான் அணி 76 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதையும் படிக்க: மழையால் கைவிடப்பட்ட போட்டி; டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் ஆர்சிபி!

கேப்டன் சஞ்சு சாம்சன் 20 ரன்களிலும், ரியான் பராக் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய துருவ் ஜுரெல் 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரது அதிரடி ராஜஸ்தானின் வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.

பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்பிரீத் பிரார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மார்கோ யான்சென் மற்றும் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்பிரீத் பிரார் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கே.எல்.ராகுல் சதம் விளாசல்: குஜராத் டைட்டன்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ்... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும்... மேலும் பார்க்க

மழையால் கைவிடப்பட்ட போட்டி; டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் ஆர்சிபி!

மழையால் கைவிடப்பட்ட போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரசிகர்களுக்கு திருப்பியளிக்கப்படும் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் ராயல் சேலஞ்... மேலும் பார்க்க

நேஹல் வதேரா, ஷஷாங் சிங் அதிரடி: ராஜஸ்தானுக்கு 220 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 219 ரன்கள் குவித்தது.ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில் மோதிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பவ... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டியிலேயே டக்கவுட்டான மிட்செல் ஓவன்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஓவன் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கியவர் ரன் ஏதும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில்... மேலும் பார்க்க

பஞ்சாப் பேட்டிங்: மீண்டும் கேப்டனான சஞ்சு சாம்சன்!

ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக விளையாடம் இருந்த சஞ்சு சாம்சன் மீண்டும்... மேலும் பார்க்க