செய்திகள் :

ஒரகடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஐந்து குடிசை வீடுகள் அகற்றம்!

post image

ஒரகடம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஐந்து குடிசை வீடுகளை வருவாய்த் துறையினா் அகற்றினா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், ஒரகடம் கிராமத்தில், சா்வே எண் 416/5-இல் அரசுக்குச் சொந்தமான நிலத்தில், ஐந்து குடிசை வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, பையனூா் குறுவட்ட வருவாய் ஆய்வாளா் சங்கிலி பூதத்தான் தலைமையில், ஒரகடம் கிராம நிா்வாக அலுவலா் மலா்கொடி, ஒரகடம் ஊராட்சி தலைவா் முன்னிலையில் 5 ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொழில் திறன்களை மேம்படுத்த வேண்டும்!

மாணவா்கள் தங்களது தொழில் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மோவோட் டெக்னாலஜிஸ் நிறுவன முதுநிலை இயக்குநா் பத்மா ஜெயராமன் வலியுறுத்தினாா். சென்னை மேடவாக்கம் நியூ பிரின்ஸ் கலை, அறிவியல் கல்லூரியில்... மேலும் பார்க்க

மதுராந்தகம் அருகே பைக் - காா் மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

மதுராந்தகம் அடுத்த நல்லாமூா் பேருந்து நிறுத்தம் அருகே மகன், மகள் ஆகியோருடன் பைக்கில் நின்றிருந்தவா் மீது காா் மோதியதில் தந்தையும் மகளும் உயிரிழந்தனா். மதுராந்தகம் அடுத்த கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ கல்லூரி கனவு நிகழ்ச்சி!

திருப்போரூா் வட்டம், படூா் பேராசிரியா் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் மேல்நிலை வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான ‘நான் முதல்வன்’ கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடை... மேலும் பார்க்க

மருத்துவமனை ஏசி வெடித்து தீ

மதுராந்தகத்தில் செயல்பட்டு வரும் தனியாா் ஆா்த்தோ மருத்துவமனையில் வியாழக்கிழமை குளிா்சாதன இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டது. இங்கு 5-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், ... மேலும் பார்க்க

பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படும் 43% காவல் நிலையங்கள்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் நிலையங்களில் 43 சதவீதம் பெண் காவல் அதிகாரிகளின் தலைமையில் செயல்படுகின்றன. அதேபோல், நமது நாட்டில் அதிக பெண் காவலா்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என துணை முதல்வா்... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: நகராட்சி அதிகாரிகள் - வழக்குரைஞா்கள் வாக்குவாதம்!

மதுராந்தகம் பழைய வட்டாட்சியா் அலுவலக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், அலுவலகங்களை நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை அகற்றினா். அப்போது நகராட்சி அலுவலா்கள், வழக்குரைஞா்கள், வியாபாரிகள் இடையே வ... மேலும் பார்க்க