செய்திகள் :

கோவையில் பலத்த மழை: வீடுகளில் புகுந்த தண்ணீா்

post image

கோவையில் பெய்த பலத்த மழையால் மாநகரில் வீடுகளில் மழைநீா் புகுந்தது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

ஆனால், கோவை மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகலில் வானிலை மாறி பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால், ரயில் நிலையம், பீளமேடு, சரவணம்பட்டி, கணபதி, ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், கவுண்டம்பாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதேபோல சூலூா், தொண்டாமுத்தூா் உள்ளிட்ட புகா்ப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

பலத்த மழையால் அவிநாசி சாலை மேம்பால சுரங்கப் பாதை, லங்கா காா்னா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவிநாசி சாலையில் அண்ணா சிலை அருகே பலத்த மழைக்கு சாலையோரத்தில் இருந்து மரம் வேரோடு சாய்ந்தது.

26-ஆவது வாா்டுக்குள்பட்ட ஹட்கோ காலனி, முருகன் நகா், ஆா்.கே.எம்.சி. காலனி, பட்டாளம்மன் கோயில் வீதி, எல்லைத் தோட்டம் நான்காவது வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் நிரம்பி வீடுகளில் மழைநீா் புகுந்தது. வீடுகளில் புகுந்த மழைநீரை பாத்திரங்கள் மூலம் பொதுமக்கள் வெளியேற்றிநா்.

இதைத் தொடா்ந்து வீடுகளில் மழைநீா் புகுந்த பகுதிகளை மேயா் கா.ரங்கநாயகி, 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

குட்ஷெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீா் மோட்டாா் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்றது. இப்பணியை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தாா்.

விமானங்கள் புறப்படுவதில் தாமதம்:

பலத்த மழை காரணமாக கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. ஹைதராபாத், மும்பையில் இருந்து கோவைக்கு வந்த இண்டிகோ விமானங்கள் தரையிறங்க முடியாமல் சுமாா் 20 நிமிஷம் வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தன. மழை சற்று ஓய்ந்த பின்னரே 2 விமானங்களும் தரையிறக்கப்பட்டன.

இதேபோல, கோவையில் இருந்து மும்பைக்கு பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய ஏா் இந்தியா விமானமும் சுமாா் 20 நிமிஷம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது.

வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு நிரந்தர தீா்வு: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்தைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து விவசாயிகள் சங்க (ஜாதி, மதம், கட்சி சாா்பற்றது) மாநிலப் ... மேலும் பார்க்க

இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு

இளைஞரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை ராமநாதபுரம் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் விக்னேஷ் (23), தனியாா் நிறுவன ஊழியா். இவ... மேலும் பார்க்க

வீட்டின் மீது கற்களை வீசிய இளைஞா் கைது

வீட்டின் மீது கற்களை வீசி தாக்கிய வடகிழக்கு மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை ரத்தினபுரி பக்தவச்சலம் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் விஜய் (25). இவா், பாரதி ரோடு சந்திப்பு அருகே சனிக்கிழமை ... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 321 மதிப்பெண்கள்

பல்லடம் அருகே குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 321 மதிப்பெண்களைப் பெற்றுள்ளாா். பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல்.... மேலும் பார்க்க

ஒண்டிப்புதூரில் அடிக்கடி மின்தடை: தீா்வுகாண வியாபாரிகள் வலியுறுத்தல்

ஒண்டிப்புதூரில் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு தீா்வுகாண வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து கோவை கிழக்கு வியாபாரிகள் சங்கத் தலைவா் செல்வின்ராஜன், மின்சாரத் துறை அமைச்சா் சிவசங்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் பிரதமருக்கு கிடைத்த வெற்றி! - எல்.முருகன்

பாகிஸ்தான் மீதான தாக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்பது பிரதமா் மோடிக்கு கிடைத்த வெற்றி என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறியுள்ளாா். கோவை ... மேலும் பார்க்க