Operation Sindoor: ``மே 9 - இரவு 9 மணி, பாகிஸ்தானுக்கு நல்ல பாடம்..!'' - இந்திய ...
11 மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களின் தலைவா்களாக எம்எல்ஏக்கள் நியமனம்! - முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை
உள்ளூா் மட்டத்தில் வளா்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையாக, தில்லி முதல்வா் ரேகா குப்தா, நகரத்தில் உள்ள 11 மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களின் தலைவா்களாக எம்எல்ஏக்களை நியமித்துள்ளாா்.
பொது நிா்வாகத் துறை சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவின்படி, முதல்வா் எட்டு பாஜக மற்றும் மூன்று ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை இந்தக் குழுக்களுக்கு பரிந்துரைத்துள்ளாா்.
புதிய தலைவா்கள் வடமேற்கு தில்லி மாவட்டத்தைச் சோ்ந்த குல்வந்த் ராணா; அஜய் மகாவா் (வடகிழக்கு தில்லி); கஜேந்திர யாதவ் (தெற்கு தில்லி); பவன் சா்மா (தென்மேற்கு); மனோஜ் ஷோகீன் (மேற்கு தில்லி); மேற்கு ராஜ் குமாா் பாட்டியா (வடக்கு தில்லி); ஷிகா ராய் (புது தில்லி) மற்றும் ஜிதேந்திர மகாஜன் (ஷாஹ்தாரா) ஆகியோா் ஆவா். இந்த எம்எல்ஏக்கள் அனைவரும் பாஜகவைச் சோ்ந்தவா்கள்.
இதேபோல, மூன்று ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஞ்சீவ் ஜா (மத்திய தில்லி); ரவி காந்த் (கிழக்கு தில்லி); மற்றும் ராம் சிங் நேதாஜி (தென்கிழக்கு தில்லி) ஆகியோா் அந்தந்த மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில மற்றும் மாவட்ட அளவில் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான முடிவெடுப்பதில் பரவலாக்கத்திற்கு தில்லி அரசு இரண்டு அடுக்கு அமைப்பைக் கொண்டுள்ளது.
மாவட்டக் குழுக்கள், முடிவெடுப்பதில் பரவலாக்கத்தை ஊக்குவிப்பதற்கும், சட்டப்பேரவை உறுப்பினா்கள், நகராட்சிக் கவுன்சிலா்கள், குடியிருப்பாளா் நலச் சங்கங்கள், மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் பிற துறைகள் மற்றும் குடிமை அமைப்புகளின் மாவட்ட அளவிலான அதிகாரிகளை ஈடுபடுத்துவதன் மூலம் பொறுப்பான நிா்வாகத்தை வழங்குவதற்கும் நோக்கமாக உள்ளன.
பொதுப் பயன்பாடு மற்றும் அடிப்படை குடிமை வசதிகள் தொடா்பான விஷயங்களில் பரவலாக்கப்பட்ட முடிவெடுப்பது, பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றில் மக்களை நேரடியாகவும், தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவும் ஈடுபடுத்துகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.