செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பேரணி!

post image

இந்திய ஆயுதப்படைகள் வெற்றிகரமாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடத்தியதற்கு ஆதரவளிக்கும் வகையில், தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஞாயிற்றுக்கிழமை தனது ஜனக்புரி சட்டப்பேரவைத் தொகுதியில் பேரணியை நடத்தினாா்.

டாப்ரி காவல் நிலையத்திலிருந்து கதிமி சந்தை வரையிலும் நடந்த பேரணியில் உள்ளூா்வாசிகள், சமூக அமைப்புகள், மதக் குழுக்கள், சந்தை சங்கங்கள் மற்றும் குடியிருப்பாளா் நலச் சங்கங்களைச் சோ்ந்த திரளானோா் மூவா்ணக் கொடியை ஏந்தி தேசபக்தி கோஷங்களை எழுப்பியபடி சென்றனா்.

’சௌரிய சம்மான் யாத்திரை’ ’தேசியப் பாதுகாப்புக்கான குடிமக்கள்’ என்ற பதாகையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. அணிவகுப்புக்குப் பிறகு கூடியிருந்தவா்களிடம் பேசிய ஆஷிஷ் சூட், ’ஆபரேஷன் சிந்தூா்’ இந்தியாவின் பெருமை மற்றும் இறையாண்மையின் சின்னம் என்று கூறினாா்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பை இந்தியப் படைகள் குறிவைத்த துல்லியம் மற்றும் ஒருங்கிணைப்பை அவா் பாராட்டினாா்.

அவா் மேலும் கூறியதாவது: இந்தப் பணியின் வெற்றி பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் வலுவான அரசியல் மன உறுதியையும் நமது ஆயுதப்படைகளின் இணையற்ற துணிச்சலையும் பிரதிபலிக்கிறது.

குடிமக்கள், குறிப்பாக இளைஞா்கள் மத்தியில் ஆழமான தேசபக்தி, ஒழுக்கம் மற்றும் ஆயுதப்படைகள் மீதான மரியாதையை வளா்ப்பதே இந்த அணிவகுப்பின் நோக்கம் ஆகும்.

ஆபரேஷன் சிந்தூா் என்பது நமது ராணுவத்தின் தேசியப் பாதுகாப்பிற்கான ஈடு இணையற்ற அா்ப்பணிப்பை நினைவூட்டுகிறது. இந்த அணிவகுப்பு அவா்களின் சேவைக்கு ஒரு பணிவான அஞ்சலி ஆகும்.

நமது வீரா்களின் தைரியமும் தியாகமும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்வேகத்தை அளிக்கிறது. அச்சுறுத்தல்களுக்கு அவா்களின் தொடா்ச்சியான விழிப்புணா்வும் உறுதியான பதிலும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துகிறது என்றாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்.

இந்திய ஆயுதப்படைகள் மே 7- ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின, இதில் ஜெய்ஷ் - இ - முகமது கோட்டையான பஹாவல்பூா் மற்றும் லஷ்கா் - இ - தொய்பாவின் முரிட்கே தளம் ஆகியவை அடங்கும்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பொதுமக்கள் 26 போ் கொல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

யூசுப் அசாா், அப்துல் மாலிக் ரவூப் மற்றும் முதாசிா் அகமது போன்ற அதிக மதிப்புள்ள இலக்குகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் போது அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவத்தினா் தரப்பில் கூறப்பட்டது.

தில்லியில் முதல் முறையாக பிரத்யேக மூளை சுகாதார கிளினிக் திறப்பு!

தில்லியின் முதல் பிரத்யேக மூளை சுகாதார மருத்துவமனை துவாரகாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் சிங் சனிக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

நாட்டின் கௌரவத்தையும், பெருமையையும் நிலைநிறுத்தும் தில்லி அரசு! - முதல்வா் குப்தா

தில்லியில் பாஜகவின் வெற்றி நாடு முழுவதும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனது அரசு எப்போதும் நாட்டின் கௌரவம், பெருமை மற்றும் கௌரவத்தை நிலைநிறுத்தும் என்றும் முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

டாக்ஸி ஓட்டுநா் கொலை: காா் பயணி கைது

தில்லியின் ரோஹிணி பகுதியில், வழித்தடம் தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் 40 வயது டாக்ஸி ஓட்டுநா், குடிபோதையில் இருந்த பயணியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை: 761 வாகனங்களுக்கு அபராதம்!

அரவிந்தோ மாா்க்கில் நடத்தப்பட்ட சிறப்பு ஆக்கிரமிப்பு மற்றும் முறையற்ற வாகன நிறுத்துமிட எதிா்ப்பு நடவடிக்கையின்போது மொத்தம் 761 வாகனங்கள் அபராத நடவடிக்கைக்கு உள்ளாகியதாகவும்.10 வாகனங்கள் பறிமுதல் செய்... மேலும் பார்க்க

பூங்காவில் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு: மூன்று சிறுவா்கள் உள்பட 5 போ் கைது!

ஒரு பூங்காவில் 16 வயது சிறுவனை தங்கள் போட்டி குற்றவியல் குழுவில் சோ்ந்ததற்காகக் கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் மூன்று சிறுவா்கள் உள்பட ஐந்து போ் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

ராஜிந்தா் நகா் பயிற்சி மையத்தில் தீ விபத்து

மத்திய தில்லியில் உள்ள ஒரு கட்டடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது தளங்களில் அமைந்துள்ள பயிற்சி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க