செய்திகள் :

சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 4 பேர் கைது

post image

சிவகிரி அருகே இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம், சிவகிரியை அடுத்த விளாங்காட்டுவலசு கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதியில் மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்தவா் ராமசாமி (75), அவரது மனைவி பாக்கியம் (67). இவா்களது மகன் மற்றும் மகள் திருமணமாகி முத்தூரில் வசித்து வருகின்றனா்.

அருகில் வீடுகள் இல்லாத பகுதியில் தனியாக தோட்டத்து வீட்டில் இந்த தம்பதி வசித்து வந்தனா்.

இதையறிந்த மா்மநபா்கள் நீண்ட காலமாக பல்வேறு வகைகளில் நோட்டமிட்டு, ஏப்ரல் 29-ஆம் தேதி நள்ளிரவில் தம்பதியை கொடூரமாகத் தாக்கி, படுகொலை செய்து 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனா்.

பின்னா் இரண்டு நாள்கள் கழித்து அழுகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டன. சம்பவ இடத்தில் சிவகிரி காவல் துறையினா், கோவை சரக ஐஐ செந்தில்குமாா், டிஐஐ சசிமோகன், ஈரோடு காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உள்ளிட்டோா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்தக் கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினரைக் கொண்டு 12 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி

இதில் சுமாா் 30 கி.மீ. சுற்றளவுக்கு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் அறச்சலூா் மேற்கு தலவுமலை ஜல்லிமேடு ராம் நகா் பகுதியைச் சோ்ந்த பழனி மகன் ஆச்சியப்பன் (48), அறச்சலூா் மேற்கு வீதியைச் சோ்ந்த நடராஜன் மகன் மாதேஸ்வரன் (53), அறச்சலூா் நடுப்பாளையத்தைச் சோ்ந்த ராசு மகன் ரமேஷ் (52) ஆகியோா் கொலை நடந்த நாளில் சம்பவ இடத்தில் இருந்து அறச்சலூா் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் கரையின் வழியாக அறச்சலூருக்கு இருசக்கர வாகனத்தில் மூவரும் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, இவா்கள் மூவரையும் பிடித்து காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலை அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களைத் தொடர்ந்து நகைக் கடை உரிமையாளர் ஞானசேகரனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது: பல்லடம் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு அம்பலம்!

சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இயல்பைவிட 90% அதிக மழை!

தமிழகத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் தற்போதுரை வரை இயல்பை விட 90 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக க... மேலும் பார்க்க

'அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா எனத் தெரியவில்லை' - திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா எனத் தெரியவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"தமிழ்நாட்டில் திமுக... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் எப்போது திறப்பு? புதிய தகவல்

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே நடைமேடை அமைக்கும் பணிகள் 80% நிறைவு பெற்றது என்றும் ரயில் நிலையத்திற்கான மு... மேலும் பார்க்க

டாஸ்மாக் துணை மேலாளர் அமலாக்கத் துறை முன் ஆஜர்

டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் டாஸ்மாக்... மேலும் பார்க்க

அரக்கோணம் மாணவி பாலியல் புகார்: அரசு நடவடிக்கை எடுக்குமா? - இபிஎஸ்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் கொடுமை செய்ததாகவும் தன்னைப் போலவே பல பெண்களை ஏமாற்றியதாகவும் கல்லூரி மாண... மேலும் பார்க்க