செய்திகள் :

கூகுள் உதவியுடன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த மனநலம் பாதித்த பெண்

post image

தாணேவில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூகுள் தேடலின் உதவியுடன் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்சைச் சேர்ந்தவர் ஃபுல்தேவி சந்த் லால் (50). மனநலம் பாதிக்கப்பட்ட இப்பெண், டிசம்பர் 2024 இல் ஷாஹாபூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து காணாமல் போனார்.

வறுமையில் வாடிய நிலையில் இருந்த அவரை பால்கர் மாவட்டத்தின் நல்லசோபரா பகுதியில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர் தன்னார்வ தொண்டு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே அவரை பராமரித்து வந்த தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் கூகிள் தேடலைப் பயன்படுத்தி அப்பெண்ணின் கிராமத்தைக் கண்டுபிடித்தனர்.

ஜோ பைடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி

பிறகு ஆசிரமத்தில் அப்பெண் இருப்பது குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணை தங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரது உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆசிரமம் வந்தனர்.

நாட்டைப் பாதுகாப்பதில் இந்திரா காந்தியைப் போல் இருக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானுக்கு எதிரான போரிலும், வங்கதேசம் உருவானதிலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பங்கு மறக்கமுடியாதது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். இந்திரா சோலார் கிரி ஜல விகாசம் திட... மேலும் பார்க்க

அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல: உச்ச நீதிமன்றம்

உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல என இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவை வளாகத்தில் தீ விபத்து!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.மும்பையில் உள்ள மாநில சட்டப்பேரவை வளாகத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்கேனிங் இயந்திரத்தில் இன்... மேலும் பார்க்க

புணே கார் விபத்து: ஓராண்டாகியும் நீதிக்காக போராடும் குடும்பத்தினர்!

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் 17 வயது சிறுவன் குடிபோதையில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பணியாளர்கள் அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா கொல்லப்பட்டு இன்றுடன்(மே 19) ஓர... மேலும் பார்க்க

கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசின் கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகளவில் நடைபெறும் இணைய மோசடிகள் மற்றும் ஹேக் செய்யப... மேலும் பார்க்க

திருப்பதி கோயிலுக்கு.. மைசூர் அரச குடும்பத்தினர் 100 கிலோ வெள்ளி விளக்கு நன்கொடை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 100 கிலோ எடையுள்ள வெள்ளி விளக்கை நன்கொடையாக வழங்கியுள்ளார் பக்தர் ஒருவர். பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானிடம் வேண்டுதல்கள் வைப்பதும், அது... மேலும் பார்க்க