மகாராஷ்டிர பேரவை வளாகத்தில் தீ விபத்து!
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.
மும்பையில் உள்ள மாநில சட்டப்பேரவை வளாகத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்கேனிங் இயந்திரத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சில நிமிடங்களில் தீயை அணைத்தனர்.
சட்டப்பேரவை வளாகத்தின் பிற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் முதல்கட்டத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீ விபத்துக்கான காரணம் மின் கசிவாக இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.