செய்திகள் :

டாஸ்மாக் துணை மேலாளர் அமலாக்கத் துறை முன் ஆஜர்

post image

டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்த நிலையில் ஜோதி சங்கரிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடா்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநா் விசாகன் வீடு, ஆழ்வாா்பேட்டையிலுள்ள திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தி, சம்பந்தப்பட்டவா்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினா்.

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை!

தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் 9 இடங்களில் சோதனை நடைபெற்று முடிந்தது. இதில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததுடன், விசாகன், அரசு ஒப்பந்ததாரா் ராஜேஷ்குமாா், தொழிலதிபா் தேவகுமாா் ஆகியோரையும் விசாரணை செய்த அமலாக்கத் துறையினா், விசாரணைக்குப் பின் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

கேரளத்தில் மே 27ல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மைய தலைவர்!

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 27ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்தார். இதுதொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அம... மேலும் பார்க்க

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி திவ்யா(30). ஆட்டோ ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் க்யூஆர் கோடு மூலமாக மாணவர் சேர்க்கை: அமைச்சர் பாராட்டு

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் ஒன்றிய... மேலும் பார்க்க

கோவை, நீலகிரியில் 2 நாள்களுக்கு மிக கனமழை: வானிலை மையம்

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மத்தியில் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்... மேலும் பார்க்க

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது: பல்லடம் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு அம்பலம்!

சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இயல்பைவிட 90% அதிக மழை!

தமிழகத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் தற்போதுரை வரை இயல்பை விட 90 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக க... மேலும் பார்க்க