செய்திகள் :

மும்பை: குடிபோதையில் தகராறு; இரு குடும்பத்தினர் மோதிக்கொண்டதில் 3 பேர் படுகொலை

post image

மும்பை தகிசர் கண்பத் நகர் குடிசைப்பகுதியில் வசித்தவர் ஹமித் ஷேக்(49). இவரது வீட்டிற்கு அருகில் ராம் குப்தா(50) என்பவர் வசித்து வந்தார்.

இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

ராம் குப்தா அப்பகுதியில் தேங்காய் கடை நடத்தி வந்தார். அவரது கடை வழியாக ஹமித் ஷேக் குடிபோதையில் சென்றார். அப்போது அவர் குடிபோதையில் ராம் குப்தாவிடம் ஏதோ பேசி வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

சித்தரிப்பு படம்

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் தங்களது மகன்களுக்கு போன் செய்து வரவழைத்தனர்.

எனவே ராம் குப்தாவின் மகன் அமர், அர்விந்த், அமித் ஆகியோர் ஆயுதங்களுடன் வந்தனர். ஹமித் ஷேக்கின் இரண்டு மகன்களும் வந்தனர்.

இரு தரப்பினரும் தெருவில் கடுமையாக மோதிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இத்தாக்குதலில் ராம் குப்தா மற்றும் அவரது மகன் அர்விந்த் ஆகியோர் உயிரிழந்தனர். எதிர் தரப்பில் ஹமித் ஷேக் உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

இருவரது மகன்களும் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மூவரது உடல்களையும் மீட்டு போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். சம்பவ இடத்தில் மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் இருப்பதால் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். இம்மோதலில் இரு குடும்பத்தில் இருந்து 10 பேர் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்

வயநாடு: அனுமதி பெறாத தங்கும் விடுதி; பெண்ணின் தலையில் சரிந்த கூரை; சோகத்தில் முடிந்த சுற்றுலா

வயநாடு நிலச்சரிவு பேரழிவுக்குப் பிறகு சுற்றுலாத்துறையும் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. மீண்டும் சுற்றுலாவை மேம்படுத்த வயநாடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கோடை ... மேலும் பார்க்க

ஈரோடு: `வயதான தம்பதிகளை கொன்றது ஏன்?’ தோட்டத்து வீடு கொலை வழக்கில் நால்வர் கைது - பகீர் பின்னணி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேமலைக்கவுண்டன்புதூரில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி ... மேலும் பார்க்க

`தங்க நகைக்காக தங்கையுடன் சேர்ந்து மாமியாரை கொடூரமாகக் கொன்ற மருமகள்' - பதற வைக்கும் பின்னணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள வீரப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது - மைமூனா தம்பதி. தனியார் பள்ளி ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்திருக்கிறார் முகமது. போலீஸ் விசாரணைமுகமது வேலை ... மேலும் பார்க்க

Scam Alert: ஆன்லைன் ஆர்டர் டெலிவரி அட்டைப்பெட்டியை வைத்து பணமோசடி; பகீர் பின்னணியும் தற்காப்பும்

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த மோசடி இப்போது பரவலாகிவிட்டது.`கார்டு மேலே இருக்கும் 16 நம்பர் சொல்லு...' `உன் பேங்க் அக்கவுண்ட் லாக் ஆயிடுச்சி' என அறைகுறை தமிழில் பேசியவர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்... மேலும் பார்க்க

பெரம்பலூர்: வீட்டு ரசீது வழங்க ரூ.25,000 லஞ்சம்; நகராட்சி வருவாய் ஆய்வாளர் சிக்கிய எப்படி?

பெரம்பலூர், ஆலம்பாடி ரோடு அன்பு நகரைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது மனைவி மகேஸ்வரி. இவர், தற்போது பெரம்பலூர் நகர்ப்பகுதியில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார்.அந்த வீட்டிற்கு நகராட்சியில் ரசீது போடுவதற்கா... மேலும் பார்க்க

கரூர்: சுற்றுலா வாகனம் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து; 5 பேர் பலி; நிவாரணம் அறிவித்த முதல்வர்

கரூர், செம்மடை அருகே கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி சென்டர் மீடியனில் ஏறி இறங்கியது. இதில் எதிரில் வந்த சுற்றுலா வாகனத்தில் (... மேலும் பார்க்க