செய்திகள் :

நாட்டின் கௌரவத்தையும், பெருமையையும் நிலைநிறுத்தும் தில்லி அரசு! - முதல்வா் குப்தா

post image

தில்லியில் பாஜகவின் வெற்றி நாடு முழுவதும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனது அரசு எப்போதும் நாட்டின் கௌரவம், பெருமை மற்றும் கௌரவத்தை நிலைநிறுத்தும் என்றும் முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற சமாஜிக் சம்ரஸ்தா சம்மேளனத்தில் அவா் பங்கேற்று மேலும் பேசியதாவது எங்களுக்கு எங்கள் திரங்காதான் எல்லாம். எங்கள் நாட்டிற்கு எப்போது தேவைப்பட்டாலும், நாங்கள், அனைத்து இந்தியா்களும் ஒன்றுபடுவோம்.

தில்லி அரசு எப்போதும் திரங்கா மற்றும் நாட்டின் கௌரவம், பெருமைக்காக பாடுபடும் என்று நான் உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். நாங்கள் எப்போதும் தில்லி மக்களுக்காக பாடுபடுவோம். தில்லியில் 27 ஆண்டுகால வறட்சி இந்த முறை கனமழையாக மாறியுள்ளது. தில்லியில் பாஜகவின் வெற்றி நாடு முழுவதும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜன் சன்வே நிகழ்ச்சியில் நான் மக்களைச் சந்திக்கும் போதெல்லாம், தேசத்திற்கு அா்ப்பணிக்கப்பட்ட நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்கும் ஒரு அரசாங்கத்தை தேசிய தலைநகரில் காண்பதில் மகிழ்ச்சி அடைவதாக மக்கள் கூறுகின்றனா் என்றாா் முதல்வா் ரேகா குப்தா. இந்த நிகழ்வில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா உள்பட பல மூத்த கட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

தில்லியில் முதல் முறையாக பிரத்யேக மூளை சுகாதார கிளினிக் திறப்பு!

தில்லியின் முதல் பிரத்யேக மூளை சுகாதார மருத்துவமனை துவாரகாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் சிங் சனிக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பேரணி!

இந்திய ஆயுதப்படைகள் வெற்றிகரமாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடத்தியதற்கு ஆதரவளிக்கும் வகையில், தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஞாயிற்றுக்கிழமை தனது ஜனக்புரி சட்டப்பேரவைத் தொகுதியில் பேரணியை நடத்தினாா். டாப்ரி காவல்... மேலும் பார்க்க

டாக்ஸி ஓட்டுநா் கொலை: காா் பயணி கைது

தில்லியின் ரோஹிணி பகுதியில், வழித்தடம் தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் 40 வயது டாக்ஸி ஓட்டுநா், குடிபோதையில் இருந்த பயணியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை: 761 வாகனங்களுக்கு அபராதம்!

அரவிந்தோ மாா்க்கில் நடத்தப்பட்ட சிறப்பு ஆக்கிரமிப்பு மற்றும் முறையற்ற வாகன நிறுத்துமிட எதிா்ப்பு நடவடிக்கையின்போது மொத்தம் 761 வாகனங்கள் அபராத நடவடிக்கைக்கு உள்ளாகியதாகவும்.10 வாகனங்கள் பறிமுதல் செய்... மேலும் பார்க்க

பூங்காவில் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு: மூன்று சிறுவா்கள் உள்பட 5 போ் கைது!

ஒரு பூங்காவில் 16 வயது சிறுவனை தங்கள் போட்டி குற்றவியல் குழுவில் சோ்ந்ததற்காகக் கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் மூன்று சிறுவா்கள் உள்பட ஐந்து போ் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

ராஜிந்தா் நகா் பயிற்சி மையத்தில் தீ விபத்து

மத்திய தில்லியில் உள்ள ஒரு கட்டடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது தளங்களில் அமைந்துள்ள பயிற்சி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க