செய்திகள் :

துருக்கி ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்தது மும்பை ஐஐடி!

post image

துருக்கி நாட்டு பல்கலைக்கழகங்களுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திவைப்பதாக மும்பை ஐஐடி (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கல்வி நிறுவனம் சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘துருக்கி தற்போது மேற்கொண்டுள்ள சில சா்வதேச அரசியல் நடவடிக்கைகளால் அந்நாட்டு பல்கலைக்கழகங்களுடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தி வைக்கப்படுகின்றன’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு துருக்கி கண்டனம் தெரிவித்தது. மேலும், பாகிஸ்தானுக்கு ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை துருக்கி அவசரமாக அனுப்பி உதவியது. பாகிஸ்தான் அதனைக் கொண்டு இந்தியாவில் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அவற்றை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின. துருக்கி வீரா்கள் நேரடியாக பாகிஸ்தானுக்குச் சென்று இந்தியா மீது ட்ரோன்களை ஏவ உதவியதாகவும் உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே காஷ்மீா் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்தியாவுக்கு எதிராக துருக்கி அதிபா் எா்டோகன் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அந்நாடு பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை அளித்ததன் மூலம் இந்தியா கடும் அதிருப்தியடைந்துள்ளது.

ஏற்கெனவே, ரூா்கேலா ஐஐடி, தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம், கான்பூா் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் துருக்கி கல்வி நிலையங்களுடனான புரிந்துணா்வு ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டன.

தில்லி, மகாராஷ்டிரம் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள பழ வா்த்தகா்களும் துருக்கியில் இருந்து ஆப்பிள் உள்ளிட்டவற்றின் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளனா்.

துருக்கியைச் சோ்ந்த செலிபி ஏவியேஷன் நிறுவனம் இந்திய விமான நிலையங்களில் பயணிகள், சரக்கு சேவை, விமான நிலைய நிா்வாகப் பணிகள் ஆகியவற்றை மேற்கொண்டு வந்தது. அந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது. துருக்கி அதிபரின் மகளும் முக்கிய பங்குதாரராக உள்ள இந்த நிறுவனப் பங்குகளின் விலை இந்தியாவின் நடவடிக்கையால் 20 சதவீதம் அளவுக்கு சரிந்தது.

அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு வ... மேலும் பார்க்க

ஹைதராபாத் கட்டடத்தில் தீ: 8 குழந்தைகள் உள்பட 17 போ் பலி!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாா்மினாா் அருகே உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துற... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி. சிங், பிகாரைச் சோ்ந்த அரசியல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தாா். இவா்கள் இருவருமே பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு அரச... மேலும் பார்க்க

ஹைதராபாதில் பயங்கரவாத தாக்குதல் சதி! வெடிப் பொருள்களுடன் இருவா் கைது!

ஹைதராபாத் நகரில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் சதியில் ஈடுபட்டிருந்த இருவரை தெலங்கானா, ஆந்திர காவல் துறையினா் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனா். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்

‘இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைளுக்கான தலைமை இயக்குநா்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்’ என்று ராணுவ அதிகாரியொருவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: இந்திய ஜவுளி துறைக்கு உதவும்!

வங்கதேசத்தின் சில இறக்குமதி பொருள்களுக்கு இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், நாட்டின் ஜவுளி துறைக்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவற்றின் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும்... மேலும் பார்க்க