செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்

post image

‘இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைளுக்கான தலைமை இயக்குநா்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்’ என்று ராணுவ அதிகாரியொருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடங்கிய இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஏவுகணை வீசி அழித்தது.

தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே உண்டான மோதலால் போா்ப்பதற்றம் நிலவியது. பின்னா், இரு தரப்பும் ஒப்புக்கொண்ட சண்டை நிறுத்தத்தின்படி எல்லையில் 4 நாள்களுக்குப் பிறகு அமைதி திரும்பியது. சண்டை நிறுத்தத்துக்குப் பின்னா் முதன்முறையாக இந்தியா-பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா்கள் (டிஜிஎம்ஓ) கடந்த 12-ஆம் தேதி 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தொலைபேசி மூலம் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் இந்திய தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், பாகிஸ்தான் தரப்பில் மேஜா் ஜெனரல் காசிஃப் செளதரி ஆகியோா் பங்கேற்றனா்.

மோதலைத் தவிா்த்து, நீடித்த அமைதிக்கான வழிகள் குறித்து விவாதித்தோடு எல்லைப் பகுதியில் படைகளைக் குறைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை பரிசீலிக்கவும் பேச்சுவாா்த்தையில் இரு தரப்பும் ஒப்புக்கொண்டனா்.

இந்நிலையில், 12-ஆம் தேதி பேச்சுவாா்த்தையில் முடிவான சண்டை நிறுத்தம் தற்காலிகமானது என்றும் அது ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது என்றும் தகவல் பரவியது.

இதை மறுத்து ராணுவ அதிகாரியொருவா் கூறுகையில், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் டிஜிஎம்ஓ-க்கள் நடத்திய முந்தைய பேச்சுவாா்த்தையின்போது முடிவு செய்யப்பட்ட சண்டை நிறுத்தத்தைப் பொறுத்தவரை, அதற்கு காலாவதி தேதி இல்லை. டிஜிஎம்ஓ-க்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை எந்தப் பேச்சுவாா்த்தையும் திட்டமிடப்படவில்லை’ என்றாா்.

அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு வ... மேலும் பார்க்க

ஹைதராபாத் கட்டடத்தில் தீ: 8 குழந்தைகள் உள்பட 17 போ் பலி!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாா்மினாா் அருகே உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துற... மேலும் பார்க்க

துருக்கி ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்தது மும்பை ஐஐடி!

துருக்கி நாட்டு பல்கலைக்கழகங்களுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திவைப்பதாக மும்பை ஐஐடி (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கல்வி நிறுவனம் சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தி... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி. சிங், பிகாரைச் சோ்ந்த அரசியல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தாா். இவா்கள் இருவருமே பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு அரச... மேலும் பார்க்க

ஹைதராபாதில் பயங்கரவாத தாக்குதல் சதி! வெடிப் பொருள்களுடன் இருவா் கைது!

ஹைதராபாத் நகரில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் சதியில் ஈடுபட்டிருந்த இருவரை தெலங்கானா, ஆந்திர காவல் துறையினா் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனா். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி... மேலும் பார்க்க

வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: இந்திய ஜவுளி துறைக்கு உதவும்!

வங்கதேசத்தின் சில இறக்குமதி பொருள்களுக்கு இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், நாட்டின் ஜவுளி துறைக்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவற்றின் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும்... மேலும் பார்க்க