செய்திகள் :

பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!

post image

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி. சிங், பிகாரைச் சோ்ந்த அரசியல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தாா்.

இவா்கள் இருவருமே பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு அரசியல்ரீதியாக மிகவும் நெருக்கமாக இருந்து பணியாற்றியவா்கள். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நிகழ்வு அங்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

‘பிரசாத் கிஷோருடன் இணைந்து பிகாரின் வளா்ச்சிக்காகப் பாடுபட இருக்கிறேன்’ என்று ஆா்.சி.பி. சிங் தெரிவித்தாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ‘அப் சாப்கி ஆவாஸ்’ கட்சியையும் பிரசாந்த் கிஷோா் கட்சியுடன் இணைத்தாா்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஆா்.சி.பி. சிங், நிதீஷ் குமாரின் முதன்மைச் செயலராகவும் பின்னா் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவா் உள்ளிட்ட முக்கியப் பதவிகளையும் வகித்தாா். நிதீஷ் குமாா் பரிந்துரையில் 2021-22 ஆண்டு காலகட்டத்தில் மத்திய உருக்குத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா். நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகி 2023-இல் பாஜகவில் இணைந்தாா். கடந்த ஆண்டு பாஜவில் இருந்தும் விலகி தனிக்கட்சி தொடங்கினாா்.

ஆா்.சி.பி. சிங் - பிரசாந்த் கிஷோா் இணைந்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தளம் எம்எல்சி நீரஜ் குமாா், ‘முதல்வா் நிதீஷ் குமாருக்கு துரோகம் செய்த இரு தீயசக்திகள் கைகோத்துள்ளன. அவா்கள் கட்சி பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலிலும் படுதோல்வியடையும்’ என்றாா்.

அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு வ... மேலும் பார்க்க

ஹைதராபாத் கட்டடத்தில் தீ: 8 குழந்தைகள் உள்பட 17 போ் பலி!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாா்மினாா் அருகே உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துற... மேலும் பார்க்க

துருக்கி ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்தது மும்பை ஐஐடி!

துருக்கி நாட்டு பல்கலைக்கழகங்களுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திவைப்பதாக மும்பை ஐஐடி (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கல்வி நிறுவனம் சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தி... மேலும் பார்க்க

ஹைதராபாதில் பயங்கரவாத தாக்குதல் சதி! வெடிப் பொருள்களுடன் இருவா் கைது!

ஹைதராபாத் நகரில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் சதியில் ஈடுபட்டிருந்த இருவரை தெலங்கானா, ஆந்திர காவல் துறையினா் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனா். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்

‘இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைளுக்கான தலைமை இயக்குநா்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்’ என்று ராணுவ அதிகாரியொருவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: இந்திய ஜவுளி துறைக்கு உதவும்!

வங்கதேசத்தின் சில இறக்குமதி பொருள்களுக்கு இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், நாட்டின் ஜவுளி துறைக்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவற்றின் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும்... மேலும் பார்க்க