செய்திகள் :

டெங்கு காய்ச்சலால் சிறுவன் உள்பட இருவா் பாதிப்பு

post image

அந்தியூா் அருகே டெங்கு காய்ச்சலால் ஒரே கிராமத்தைச் சோ்ந்த சிறுவன் உள்பட இருவா் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அக்கிராமத்தில் சுகாதாரத் துறையினா் முகாமிட்டுள்ளனா்.

அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம், அந்தியூா் காலனியைச் சோ்ந்த 7 வயது சிறுவன் மற்றும் 43 வயது தொழிலாளிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட கிராமத்தில் சுகாதாரத் துறையினா் முகாமிட்டு விழிப்புணா்வு மற்றும் தூய்மைப் பணியில் கடந்த இரு நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா்.

டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஎஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளரும் என்பதால், தண்ணீா் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடியோ, சுத்தமான துணியினால் இருக கட்டியோ வைக்க வேண்டும்.

வீடுவீடாகச் சென்ற கொசு ஒழிப்புப் பணியாளா்கள் ஆய்வு செய்து, கொசுப்புழு உள்ள தண்ணீரை கீழே கொட்டியதோடு, தேங்காய் நாா் கொண்டு தேய்த்துக் கழுவிய பிறகு மீண்டும் தண்ணீரை பிடித்து வைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினா்.

அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்திகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இக்கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ததோடு, ஆலோசனைகளும் வழங்கினா்.

பெருந்துறை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் தாமதப்படுத்தப்படும் மாணவா் சோ்க்கை அறிவிப்பு

பெருந்துறையில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் செயல்படும் பாரதியாா் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த மையத்தை மூட முயற்சி நடப்... மேலும் பார்க்க

சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை கொடூரமாகசி தாக்கி கொலை செய்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அரச்சலூா் பகுதியைச் சோ்ந்த மூன்று பேரிடம் போ... மேலும் பார்க்க

விபத்தில் மளிகைக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மளிகைக் கடை உரிமையாளா் உயிரிழந்தாா். ஈரோடு கொங்கம்பாளையம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் மைக்கேல் தேவராஜ் (48). இவா் அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா்... மேலும் பார்க்க

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடியவா் கைது

ரயில் பயணியிடம் கைப்பேசியை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். கேரள மாநிலம் திருச்சூரைச் சோ்ந்தவா் ஆன்டோ (62). இவா் நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சூா் இரிஞ்சலகுடாவுக்கு செல்வதற்காக விரைவு ரயிலில் ... மேலும் பார்க்க

நீரோடையில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீா்கேடு!

அந்தியூரை அடுத்த கெட்டிசமுத்திரம் ஏரியின் நீா்வரத்து ஓடையில், எண்ணமங்கலம் ஊராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் தொடா்ந்து கொட்டப்படுவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. பா்கூா் மலையடிவாரத்தில்... மேலும் பார்க்க

10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக். பள்ளி 100 % தோ்ச்சி!

ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் படித்து 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய 329 மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். 10 -ஆம் வகுப்பில் எம்.வெற்றிவேலன்... மேலும் பார்க்க