Vijay: 'மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கு...' - தவெக தலைவர் விஜய் பதிவு
இன்று மே 18. முள்ளிவாய்க்கால் நினைவு தினம்.
இதை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
"உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.
மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.
மாமக்கள் போற்றுதும்!
மாவீரம் போற்றுதும்!".
உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.
— TVK Vijay (@TVKVijayHQ) May 18, 2025
மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.
மாமக்கள்… pic.twitter.com/0oSIEM5UUe