செய்திகள் :

குடியிருப்புக்குள் நுழைந்து இரைதேடிய இரண்டு சிறுத்தைகள்; பதற வைக்கும் காட்சி; எச்சரிக்கும் வனத்துறை

post image

நீலகிரியில் காடுகளை இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தஞ்சமடைந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் குடியிருப்புப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன.

காவல் நிலையத்திற்குள் நுழைந்த சிறுத்தை

வளர்ப்பு நாய்களைத் தேடி இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் சிறுத்தைகள் நாள்தோறும் சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள கொல்லிமலை பகுதியில் ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்த இரண்டு சிறுத்தைகள் நாய்கள் இருக்கிறதா? என இரைதேடிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து வனத்துறையினர், " நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தைகள் பல இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடி வருகின்றன. குன்னூர், கோத்தகிரி, ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்து சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக அதிக புகார்கள் வருகின்றன. இறைச்சிக் கழிகள் மற்றும் வளர்ப்பு நாய்களால் கவரப்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்கு சிறுத்தைகள் வருகின்றன.

இரண்டு சிறுத்தைகள்

நாய் வளர்ப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் கூண்டுகளை அமைத்து பராமரிக்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்தால் வனத்துறையை அணுகலாம். இரவு நேரங்களில் வெளியே செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை, கண்ட இடங்களில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " என எச்சரிக்கின்றனர்.

கர்நாடகா: மணமேடையில் சரிந்து விழுந்த மணமகன்; சில நிமிடத்தில் துக்க வீடாக மாறிய திருமண வீடு

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் அருகில் உள்ள ஜம்கந்தி என்ற இடத்தில் பிரவின் என்பவருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.திருமண ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடந்தன. மணமகன் மற்றும் மணமகள் என இரண்... மேலும் பார்க்க

மும்பை: ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்; அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி; மருத்துவர்கள் சொல்வது என்ன?

பொதுவாக இரட்டை குழந்தைகள் ஒட்டிப் பிறப்பது மிகவும் அபூர்வம். அதுவும் ஒரு லட்சம் குழந்தை பிறந்தால் அதில் ஒரு குழந்தை மட்டுமே இது போன்று பிறக்க வாய்ப்பு இருக்கிறது. மும்பையில் ஏற்கனவே கடந்த 13 ஆண்டுக்கு... மேலும் பார்க்க

இறந்த தாயின் வெள்ளி கொலுசைக் கேட்டு, தகனத்தை தடுத்து நிறுத்திய மகன்... ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் ஒரு மகன் வெள்ளி வளையலுக்காக தனது தாயாரின் சிதையில் ஏறி படுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் புரி தேவி. இவருக்கு 7 மகன்கள் இருக்கின்றனர்.... மேலும் பார்க்க

Kohli: விராட் கோலியின் 10 ஆம் வகுப்பு மார்க் ஷீட் இணையத்தில் வைரல்! - எவ்வளவு மதிப்பெண் தெரியுமா?

விராட் கோலியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணையதில் வைரலாகி வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு சிபிஎஸ்இ வாரியம், பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது. கடந்த ஆண்டை விட இந்... மேலும் பார்க்க

Trump Tower: `ஒரே நாளில் விற்றுத்தீர்ந்தது' - டெல்லி மக்களை கவரும் ரூ.3,250 கோடி ட்ரம்ப் டவர்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மகன் ஜூனியர் ட்ரம்ப் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் ட்ரம்ப் பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறார். இதற்காக உலகம் முழுவதும் உள... மேலும் பார்க்க

`ஒரு நாளைக்கு மூன்று முறை இதனை சாப்பிடுவேன்..'- தேநீர் பைகளை உட்கொள்ளும் இளம்பெண்!

சைப்ரஸின் லிமாசோலைச் சேர்ந்த பெண் ஒருவர் விசித்திரமான பழக்கங்களால் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார். தேநீர் பிரியர்கள் தேநீர் மீதான தங்களின் ஈர்ப்பை எப்படி எல்லாம் வெளிப்படுத்துவார்கள், ஒரு நாளைக்கு ... மேலும் பார்க்க