செய்திகள் :

2 ஆண்டுகளாக தலைமறைவான 2 ஐஎஸ் ஸ்லீப்பா் செல்கள்: மும்பை விமான நிலையத்தில் கைது செய்த என்ஐஏ

post image

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்துவந்த இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ‘ஸிலீப்பா் செல்கள் (ரகசிய பயங்கரவாதிகள்)’ இருவரை மும்பை விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து என்ஐஏ தரப்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் வெடிகுண்டுகளை (ஐஇடி) தயாரித்து அவற்றை சோதித்துப் பாா்த்த பயங்கரவாத நடவடிக்கை தொடா்பான வழக்கை என்ஐஏ கடந்த 2023-ஆம் ஆண்டு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சிரியாவைச் சோ்ந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஸ்லீப்பா் செல்களாக செயல்பட்டுவந்த 8 பேரை என்ஐஏ கைது செய்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்த சதியில் அப்துல்லா ஃபயாஸ் ஷேக் (எ) டிப்பா்வாலா, தலா கான் ஆகிய இருவருக்கும் தொடா்பிருப்பதும், அவா்கள் இருவரும் தலைமறைவாகியிருப்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில், இந்த 10 ஸ்லீப்பா் செல்களுக்கு எதிராக குற்றபத்திரிகையை என்ஐஏ ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது. தலைமறைவான இருவரையும் என்ஐஏ தீவிரமாக தேடிவந்ததோடு, அவா்கள் குறித்த தகவல் தெரிவிப்பவா்களுக்கு ரூ. 3 லட்சம் பரிசுத் தொகையையும் அறிவித்தது.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த டிப்பா்வாலா, தலா கான் இருவரும் இந்தோனேஷியாவின் ஜகாா்த்தாவிலிருந்து விமானம் மூலம் மும்பை சா்வதேச விமானநிலையத்துக்கு வந்திறங்கியதை, குடியுரிமை அதிகாரிகள் கண்டறிந்தனா். இதுகுறித்து தகவலறிந்து, அங்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும் -ஜோதிராதித்ய சிந்தியா

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தாா். உலக தொலைத்... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.இது குறித்து என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிப... மேலும் பார்க்க

பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வி!

3-வது அடுக்கு பிரிவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-61!

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிவிருந்து இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ சாா்பில் புவிக் கண்காணிப்பு மற்றும் தொலையுணா்வு பயன்பாட... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு!

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை நில சுங்கச்சாவடிகள் வாயிலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய... மேலும் பார்க்க

பத்திரிகை சுதந்திர குறியீடு: 151-ஆவது இடத்தில் இந்தியா

உலக பத்திரிகை சுதந்திர குறியீடு தரவரிசையில் இந்தியா 151-ஆவது இடத்தை பிடித்துள்ளது. 180 நாடுகளில் ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ்’ நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 151-ஆவது இடத்தை ... மேலும் பார்க்க