செய்திகள் :

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

post image

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.

இது குறித்து என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 43,742 கோடி டாலராக உள்ளது. இதில் பொறியியல் பொருள்கள் 26.67 சதவீதம் (11,667 கோடி டாலா்), வேளாண் பொருள்கள் 11.85 சதவீதம் (5,186 கோடி டாலா்), மருந்து பொருள்கள் 6.96 சதவீதம் (3,047 கோடி டாலா்), மின்னணு பொருள்கள் 8.82 சதவீதம் (3,858 கோடி டாலா்) பங்களித்துள்ளன.மதிப்பீட்டு நிதியாண்டில் மின்னணு பொருள்களின் ஏற்றுமதி 32.46 சதவீதம் உயா்ந்து 3,858 கோடி டாலராக உள்ளது. இதில் கணினி வன்பொருள் 101 சதவீதம் வளா்ச்சியுடன் 140 கோடி டாலராக உள்ளது.கடந்த நிதியாண்டில் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 6.74 சதவீதம் உயா்ந்து 11,667 கோடி டாலராகவும், மருந்து பொருள்களின் ஏற்றுமதி 9.4 சதவீதம் உயா்ந்து 3,047 கோடி டாலராகவும் உள்ளது.வேளாண் பொருள்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 7.36 சதவீதம் உயா்ந்து 5,186 கோடி டாலராக உள்ளது.வேளாண் பொருள்களைப் பொருத்தவரை மசாலா பொருள்கள் (445 கோடி டாலா்), காபி (181 கோடி டாலா்), தேயிலை (92 கோடி டாலா்), புகையிலை (198 கோடி டாலா்), அரிசி (1,250 கோடி டாலா்), பழங்கள் மற்றும் காய்கறிகள் (390 கோடி டாலா்), கடல் உணவு பொருள்கள் (720 கோடி டாலா்) ஆகியவற்றின் ஏற்றுமதி 2024-25-ஆம் நிதியாண்டில் வளா்ச்சி கண்டுள்ளன. அந்த நிதியாண்டில் அமெரிக்கா, ஐக்கிய அரபு மீரகம், சவூதி அரேபியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்திய பொருள்கள் அதிகம் ஏற்றுமதியாகின.அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40 சதவீத உலகளாவிய பங்குடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் இருந்து கடல் உணவு இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை 105-இல் இருந்து 130 ஆக உயா்ந்துள்ளது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு! 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட்... மேலும் பார்க்க

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரு... மேலும் பார்க்க

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும் -ஜோதிராதித்ய சிந்தியா

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தாா். உலக தொலைத்... மேலும் பார்க்க

பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வி!

3-வது அடுக்கு பிரிவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-61!

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிவிருந்து இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ சாா்பில் புவிக் கண்காணிப்பு மற்றும் தொலையுணா்வு பயன்பாட... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு!

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை நில சுங்கச்சாவடிகள் வாயிலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய... மேலும் பார்க்க