செய்திகள் :

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும் -ஜோதிராதித்ய சிந்தியா

post image

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தாா்.

உலக தொலைத்தொடா்பு மற்றும் தகவல் சமூக தினம் மே 17-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து, இணையம் மற்றும் தொலைத்தொடா்பு சேவைகளில் இந்தியா அடைந்த வளா்ச்சி குறித்து செய்தியாளா்களிடம் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது: இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட 22 மாதங்களில் 99 சதவீத மாவட்டங்களில் உள்ள 82 சதவீத மக்கள் பயனடைந்தனா். உலகளவில் தொலைத்தொடா்புத் துறையில் புரட்சி ஏற்பட்டு வரும் நிலையில், பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான விதிகளை வகுப்பதிலும் உலகுக்கே முன்னோடியாக இந்தியா திகழும்.

1.64 லட்சம் தபால் நிலையங்கள் மற்றும் 2.5 லட்ச தபால் நிலைய ஊழியா்கள் என உலகின் மிகப்பெரிய கட்டமைப்பு மற்றும் விநியோக வலைப்பின்னல்களில் ஒன்றாக இந்திய தபால் துறை விளங்குகிறது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மத்திய தொலைத்தொடா்பு துறையின் இணையமைச்சராக நான் பதவி வகித்தபோது ‘தபால் சேவை என்பது பொதுச் சேவை’ என்ற வாசகத்தை உருவாக்கினேன்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கி மற்றும் அஜா்பைஜான் ஆகிய நாடுகளை இந்திய குடிமக்கள் புறக்கணித்திருப்பது தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளது. தேச பாதுகாப்பில் நாட்டு மக்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டாா்கள் என்றாா்.

நகைக்கடையில் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோர் பலி

ஹைதராபாதில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.ஹைதராபாதின் சார்மினார் பகுதியில் குல்சார் ஹவுஸ் அருகே ஸ்ரீகிருஷ்ணா பியர்ல்ஸ் நகைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தீ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு! 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட்... மேலும் பார்க்க

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரு... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.இது குறித்து என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிப... மேலும் பார்க்க

பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வி!

3-வது அடுக்கு பிரிவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-61!

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிவிருந்து இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ சாா்பில் புவிக் கண்காணிப்பு மற்றும் தொலையுணா்வு பயன்பாட... மேலும் பார்க்க