செய்திகள் :

சென்னை: திடீரென உள்வாங்கிய சாலை; கார் கவிழ்ந்து விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் சொல்வது என்ன?

post image

சென்னை மத்திய கைலாஷிலிருந்து தரமணி செல்லும் பிரதான சாலையில் டைடல் பார்க் அமைந்துள்ளது.

நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இந்த டைடல் பார்க் முன்பாக செல்லும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

அந்தப் பள்ளத்திற்குள் கார் ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்தக் காரில் ஓட்டுநர் உட்பட 5 பேர் பயணித்த நிலையில் நல்வாய்ப்பாக எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளத்திலிருந்து காரை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக வெளியான செய்தியில் டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகை கார் ஓட்டும் மரியதாஸ் (47) சென்ட்ரல் ரயில் நிலையம் செய்வதற்காக விக்னேஷ், அவரின் மனைவி இரண்டு குழந்தைகளுடன் தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் ஓட்டுநர் மரியதாஸுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. மற்ற நான்கு பேரும் காயமின்றி தப்பினர்.

பள்ளம் ஏற்பட்ட இடத்திலிருந்து சில அடி தூரத்தில், மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காகச் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கிறது.

அப்பணியின் அழுத்தம் காரணமாக, பள்ளம் விழுந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் இதை, மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துள்ளது. எனினும், பள்ளம் விழுந்த காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Charminar Fire Accident: ஹைதராபாத் சார்மினார் அருகே தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு; பிரதமர் இரங்கல்

ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இன்று காலை 5.30 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் மொத்தமாக 17 நபர்கள் உ... மேலும் பார்க்க

`டயர் வெடித்து கட்டுபாட்டை இழந்த வாகனம்' சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்ததில் 5 பேர் பலியான பரிதாபம்

கோவை மாவட்டம், சங்கியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ். இவர், தன் மனைவி வசந்தா மற்றும் உறவினர்களான கோயில் பிச்சை அவரின் மனைவி லெற்றியா கிருபா, மோசஸின் மகன் கெர்சோம், அவரின் மனைவி சைனி கிருபா, கெர்ச... மேலும் பார்க்க

மது போதையில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து; பயணிகள் கதறல்.. சீட்டில் மட்டையான ஓட்டுநர்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை ஒரு அரசுப் பேருந்து சிவகாசிக்கு புறப்பட்டது. இந்தப் பேருந்தை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தஓட்டுநர் அருள் மூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார்.அதில் சுமா... மேலும் பார்க்க

'படுகாயமடைந்த குழந்தையும் இறந்தது' - நெல்லை கார் விபத்தில் சிக்கிய முழு குடும்பமும் பலியான சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை அடுத்த மைலோடு சரல்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (68). கட்டடம் கட்டும் காண்டிராக்டர். இவரது மனைவி மார்கிரேட் மேரி (57). இவர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திரு... மேலும் பார்க்க

சாத்தூர்: கிணற்றில் தவறி விழுந்த பெண்; காப்பாற்ற முயன்ற கணவன், மாமியாருக்கு நேர்ந்த சோகம்

சாத்தூர் அருகே துணி துவைப்பதற்காகச் சென்ற பெண் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் கிணற்றுக்குள் குதித்த கணவர் மற்றும் அப்பெண்ணின் மாமியார் என இருவர் நீரில் மூழ்கிப் பலியான ... மேலும் பார்க்க

Indian Army: 700 அடி ஆழத்தில் விழுந்த ராணுவ வாகனம்; மூன்று ராணுவ வீரர்கள் மரணம்

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் இந்திய ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு தேசிய நெடுஞ்சாலை 44 வழியாகச் செல்லும் ஒரு வ... மேலும் பார்க்க