செய்திகள் :

வால்பாறையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்!

post image

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசுப் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.

இன்று(மே 18) அதிகாலை திருப்பூர் பகுதியில் இருந்து 72 பயணிகளை ஏற்றிக்கொண்டு வால்பாறைக்கு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.

அதிகாலை சுமார் 3 மணி அளவில் வால்பாறை அருகே உள்ள கவர்கள் எஸ்டேட் பகுதி 33 வது கொண்டை ஊசி வளைவில் 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 40 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.

விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.

தகவல் அறிந்து வந்த வால்பாறை காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அனைவரும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர்.

இதில் ஓட்டுநர் கணேசன் வயது 49 என்பவர் பலத்த காயமடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

மே 20-ல் நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

வரும் மே 20 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து செ... மேலும் பார்க்க

கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை- தமிழிசை சௌந்தரராஜன்

கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் - குடியரசுத் தலைவர் விவகாரம்: 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கருத்துக்கேட்ட விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய கு... மேலும் பார்க்க

சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு பறந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கி... மேலும் பார்க்க

பட்டாசு கிடங்கில் வெடி விபத்து: 2 பேர் பலி!

தஞ்சாவூர்: திருவோணம் அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதி இன்றி நாட்டு வெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்... மேலும் பார்க்க

ஈரோட்டில் முதிய தம்பதி கொலை-மூவரிடம் விசாரணை

சிவகிரி அருகே முதிய தம்பதி கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி ஊராட்சிக்குள்பட்ட மேகரையான் தோட்டத்தைச் சோ்ந்தவா் விவச... மேலும் பார்க்க