செய்திகள் :

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு!

post image

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை நில சுங்கச்சாவடிகள் வாயிலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக துறையின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) அண்மையில் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

இந்தியாவின் எந்தவொரு நில சுங்கச்சாவடிகள் வழியாகவும் வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு அனுமதிக்கப்படாது. எனினும் மகாராஷ்டிரத்தில் உள்ள நஹாவா ஷேவா, மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா கடல் துறைமுகங்கள் வழியாக அந்த இறக்குமதி அனுமதிக்கப்படும்.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு பழங்கள் மற்றும் பழச் சுவையூட்டப்பட்ட பானங்கள், பிற பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், மர அறைகலன்கள் ஆகியவற்றை அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா மற்றும் மிஸோரமின் எந்தவொரு நில சுங்க நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள், மேற்கு வங்கத்தில் உள்ள சங்ராபாங்கா மற்றும் ஃபுல்பாரியின் நில சுங்க நிலையங்கள் வழியாக இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது.

இதேபோல அந்த நில சுங்க நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் வழியாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு பருத்தி மற்றும் பருத்தி நூல் கழிவின் இறக்குமதிக்கும், சொந்த தொழில்களுக்காகப் பயன்படும் நிறமிகள், சாயங்கள், பிளாஸ்டிசைசா்கள் மற்றும் சிறு மணிகள் தவிர பிளாஸ்டிக் மற்றும் பிவிசி சரக்குகளின் இறக்குமதிக்கும் அனுமதியில்லை.

இந்தத் துறைமுக கட்டுப்பாடுகள் வங்கதேசத்தில் இருந்து மீன், திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி), சமையல் எண்ணெய் மற்றும் ஜல்லி கற்கள் இறக்குமதிக்குப் பொருந்தாது. இந்தத் துறைமுக கட்டுப்பாடுகள் இந்தியா வழியாக நேபாளம், பூடானை தவிர, பிற நாடுகளுக்குச் செல்லும் வங்கதேச சரக்குகளுக்கும் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து நில சுங்கச்சாவடிகள் வழியாக வங்கதேசத்தில் பருத்தி நூல்களை இறக்குமதி செய்ய அந்நாடு அண்மையில் தடை விதித்தது. கடல் துறைமுகங்கள் வாயிலாக மட்டுமே அந்த நூல்களை இறக்குமதி செய்ய அந்நாடு அனுமதித்தது.

இதற்குப் பதிலடி அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நகைக்கடையில் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோர் பலி

ஹைதராபாதில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.ஹைதராபாதின் சார்மினார் பகுதியில் குல்சார் ஹவுஸ் அருகே ஸ்ரீகிருஷ்ணா பியர்ல்ஸ் நகைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தீ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு! 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட்... மேலும் பார்க்க

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரு... மேலும் பார்க்க

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும் -ஜோதிராதித்ய சிந்தியா

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தாா். உலக தொலைத்... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.இது குறித்து என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிப... மேலும் பார்க்க

பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வி!

3-வது அடுக்கு பிரிவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க