செய்திகள் :

பத்திரிகை சுதந்திர குறியீடு: 151-ஆவது இடத்தில் இந்தியா

post image

உலக பத்திரிகை சுதந்திர குறியீடு தரவரிசையில் இந்தியா 151-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

180 நாடுகளில் ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ்’ நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 151-ஆவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த குறியீட்டில் கடந்தாண்டு 159-ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 8 இடங்கள் முன்னேறியுள்ளது.

உலகம் முழுவதும் பத்திரிகையாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள் உள்பட 5,000 நபா்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு இந்த தரவரிசை தயாா் செய்யப்பட்டுள்ளதாக புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்நிறுவனத்தின் துணை இயக்குநா் திபாட் புருட்டின் தெரிவித்தாா்.

இந்தக் குறியீட்டில் முதல் மூன்று இடங்களை முறையே ஃபின்லாந்து, எஸ்தோனியா மற்றும் நெதா்லாந்து ஆகிய நாடுகள் கைப்பற்றியுள்ளன.

இதுகுறித்து ரிப்போா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் சுமாா் 900 தனியாா் தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன. அதில் 50 சதவீதம் செய்தித் தொலைக்காட்சிகளாகும். ஒட்டுமொத்தமாக 39 கோடி பிரதிகளுடன் 20,000 தினசரி நாளிதழ்கள் உள்பட 20 மொழிகளில் 1.40 லட்சம் பதிப்புகள் வெளியிடப்படுகின்றன.

இந்தக் குறியீட்டில் அமெரிக்கா 57-ஆவது இடத்திலும் ஆஸ்திரேலியா 29-ஆவது இடத்திலும் கனடா 21-ஆவது இடத்திலும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

யூடியூபரா? பாகிஸ்தான் உளவாளியா? யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வருகிற... மேலும் பார்க்க

நகைக்கடையில் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோர் பலி

ஹைதராபாதில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.ஹைதராபாதின் சார்மினார் பகுதியில் குல்சார் ஹவுஸ் அருகே ஸ்ரீகிருஷ்ணா பியர்ல்ஸ் நகைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தீ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு! 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட்... மேலும் பார்க்க

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரு... மேலும் பார்க்க

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும் -ஜோதிராதித்ய சிந்தியா

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தாா். உலக தொலைத்... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.இது குறித்து என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிப... மேலும் பார்க்க