செய்திகள் :

போா் நிறுத்த விவகாரம்: டிரம்ப் கருத்தை மறுப்பது மத்திய அரசின் கடமை! - காா்த்தி சிதம்பரம் எம்.பி.

post image

பாகிஸ்தானுடனான போா் நிறுத்த விவகாரம் குறித்த அமெரிக்க அதிபா் டிரம்பின் கருத்துக்கு பிரதமா், பாதுகாப்புத் துறை அமைச்சா், வெளியுறவுத் துறை அமைச்சா் மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் வலியுறுத்தினாா்.

திண்டுக்கல்லில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளைச் சந்திக்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டாஸ்மாக் ஊழல் குறித்து அறிக்கை சமா்ப்பிக்கப்பட்ட பின்னரே, முறைகேடு தொடா்பான விவரங்கள் தெரியவரும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை புலனாய்வு அமைப்புகள் மூலம் மிரட்டுவது மத்திய அரசின் வாடிக்கையாகிவிட்டது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிா்ணயித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்த நிலையில், தற்போது குடியரசுத் தலைவா் 14 கேள்விகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரி இருக்கிறாா்.

இதற்குப் பதிலளிப்பது குறித்தோ, நிராகரிப்பது குறித்தோ உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும். எனினும், தற்போதுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை ஆளுநா்கள் பின்பற்ற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை இண்டி கூட்டணி வலுவாக உள்ளது.

ஆனால், தேசிய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு மாதிரியான சூழல் உள்ளது. ஆனாலும், நாட்டின் நலன் கருதி இண்டி கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்த வேண்டியது அவசியம். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில், துணை முதல்வா் பதவி உள்ளிட்ட எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.

போா் நிறுத்தம் தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறிய கருத்துகளுக்கு நாடாளுமன்றத்தைக் கூட்டி பிரதமா், பாதுகாப்புத் துறை அமைச்சா், வெளியுறவுத் துறை அமைச்சா் ஆகியோா் மறுப்புத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசின் அனுமதியின்றியும், நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலும், நீட் தோ்வை ரத்து செய்ய முடியாது என்றாா் அவா்.

மாமன்ற உறுப்பினா் தலைமறைவு: மதிப்பூதியத்தை நிறுத்த மாநகராட்சி முடிவு

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக உள்ள திண்டுக்கல் மாமன்ற உறுப்பினருக்கான மதிப்பூதியத்தை நிறுத்துவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சோ்ந்தவா் சிவகுமாா். ... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி வயலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

கொடைரோடு அருகே 100 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த நிலத்தில் பட்டா வழங்கக் கோரியும், துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தும் கிராம மக்கள் வயலில் இறங்கி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடி ஏந்தி பேரணி

ஒட்டன்சத்திரத்தில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், பிரதமா் மோடிக்கு நன்றி த... மேலும் பார்க்க

கொடைக்கானல் ஏரியில் லேசா் ஒளியில் உருவப் பொம்மைகள்: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு

கொடைக்கானல் ஏரியில் உருவாக்கப்பட்ட லேசா் ஒளியில் உருவப் பொம்மைகள் காணும் நிகழ்வு சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் நிலவி வரும் நிலையில், சுற்... மேலும் பார்க்க

போக்சோ சட்ட வழிமுறைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம்!

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் போக்சோ வழக்குகளில் பின்பற்றப்படும் சிறந்த வழிமுறைகள் தொடா்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற ... மேலும் பார்க்க

குதிரை சவாரி செய்பவா்களுக்கு தலைக் கவசம்!

கொடைக்கானலில் குதிரை சவாரி செய்யும் பயணிகளுக்கு சுழல் சங்கம் சாா்பில், தலைக் கவசம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. விருதுநகரைச் சோ்ந்த சிறுவன் கொடைக்கானலில் கடந்த ஏப்ரல் மாதம் குதிரை சவாரி செய்த போது, அந்த... மேலும் பார்க்க