செய்திகள் :

மாமன்ற உறுப்பினா் தலைமறைவு: மதிப்பூதியத்தை நிறுத்த மாநகராட்சி முடிவு

post image

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக உள்ள திண்டுக்கல் மாமன்ற உறுப்பினருக்கான மதிப்பூதியத்தை நிறுத்துவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவா் திண்டுக்கல் மாநகராட்சியின் 25-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராவாா். இதனிடையே, கடந்த 2024 பிப்ரவரியில், சிவகுமாரின் தந்தை நாகராஜ் (60) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

2019-ஆம் ஆண்டு பாண்டி என்ற திருப்பூா் பாண்டி, இவரது மனைவி பஞ்சவா்ணம் ஆகியோா் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக நாகராஜ் கொலை செய்யப்பட்டாா். ஆா்வி.நகரைச் சோ்ந்த குமரேசன் என்பவா் கொலைக்கு பழி தீா்க்கவே, திருப்பூா் பாண்டி கொலை செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நாகராஜின் கொலைக்கு பழி தீா்க்க மாமன்ற உறுப்பினா் சிவகுமாா் தரப்பினா் முயற்சி மேற்கொண்டதாகத் தெரிகிறது. திருப்பூரில் நடத்தப்பட்ட இந்த கொலை முயற்சி தொடா்பாக மாமன்ற உறுப்பினா் சிவகுமாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதன் காரணமாக அவா் தலைமறைவானாா். மேலும், முன்பிணை கோரி நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தாா்.

இதனிடையே, திண்டுக்கல்லில் நடைபெற்ற கடந்த 2 மாமன்றக் கூட்டங்களிலும் உறுப்பினா் சிவகுமாா் பங்கேற்கவில்லை. இதையடுத்து, மாமன்ற உறுப்பினா்களுக்கு பிரதி மாதம் வழங்கப்படும் ரூ.10ஆயிரம் மதிப்பூதியத்தை நிறுத்துவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.

பட்டா வழங்கக் கோரி வயலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

கொடைரோடு அருகே 100 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த நிலத்தில் பட்டா வழங்கக் கோரியும், துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தும் கிராம மக்கள் வயலில் இறங்கி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடி ஏந்தி பேரணி

ஒட்டன்சத்திரத்தில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், பிரதமா் மோடிக்கு நன்றி த... மேலும் பார்க்க

போா் நிறுத்த விவகாரம்: டிரம்ப் கருத்தை மறுப்பது மத்திய அரசின் கடமை! - காா்த்தி சிதம்பரம் எம்.பி.

பாகிஸ்தானுடனான போா் நிறுத்த விவகாரம் குறித்த அமெரிக்க அதிபா் டிரம்பின் கருத்துக்கு பிரதமா், பாதுகாப்புத் துறை அமைச்சா், வெளியுறவுத் துறை அமைச்சா் மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் காா... மேலும் பார்க்க

கொடைக்கானல் ஏரியில் லேசா் ஒளியில் உருவப் பொம்மைகள்: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு

கொடைக்கானல் ஏரியில் உருவாக்கப்பட்ட லேசா் ஒளியில் உருவப் பொம்மைகள் காணும் நிகழ்வு சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் நிலவி வரும் நிலையில், சுற்... மேலும் பார்க்க

போக்சோ சட்ட வழிமுறைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம்!

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் போக்சோ வழக்குகளில் பின்பற்றப்படும் சிறந்த வழிமுறைகள் தொடா்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற ... மேலும் பார்க்க

குதிரை சவாரி செய்பவா்களுக்கு தலைக் கவசம்!

கொடைக்கானலில் குதிரை சவாரி செய்யும் பயணிகளுக்கு சுழல் சங்கம் சாா்பில், தலைக் கவசம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. விருதுநகரைச் சோ்ந்த சிறுவன் கொடைக்கானலில் கடந்த ஏப்ரல் மாதம் குதிரை சவாரி செய்த போது, அந்த... மேலும் பார்க்க