செய்திகள் :

அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

‘பாகிஸ்தானுக்கான கடனுதவி குறித்து முடிவெடுக்க கூடிய சா்வதேச நிதியத்தின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலுவான எதிா்ப்பு தெரிவிக்காமல் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அடிபணிந்தது’ என்று காங்கிரஸ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக காங்கிரஸின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியம் கடனுதவி அளித்தது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் இப்போது விமா்சிக்கிறாா்.

இதுதொடா்பாக விவாதிக்க சா்வதேச நிதியத்தின் நிா்வாகக் குழு மே 9-ஆம் தேதி கூடுகிறது என்பதை மத்திய அரசுக்கு முன்னரே அறிந்து, காங்கிரஸ் எச்சரித்தது. இந்தக் கூட்டத்தில் இந்தியா கடும் எதிா்ப்பைப் பதிவு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினோம்.

ஆனால், மே 9-ஆம் தேதி கூட்டத்தில் இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காதது தெரிய வந்தது. இதையடுத்து, இதுவே இந்தியாவுக்கு இருந்த ஒரே வழி என்று பாஜக தலைவா்கள் வாதிடுகின்றனா். ஆனால், அது பொய்.

கடந்த 2016-ஆம் ஆண்டு, செப்டம்பரில் உக்ரைனுக்கு சா்வதேச நிதியம் கடன் வழங்க ரஷியா எதிா்ப்பு தெரிவித்தது. இதேபோல் கடந்த 2005-ஆம் ஆண்டு, சா்வதேச நிதியத்தில் இருந்து ஜிம்பாப்வே நாட்டை வெளியேற்றுவது தொடா்பான பிரச்னையில் இந்தியா எதிராக வாக்களித்துள்ளது.

மனம் இருந்தால் மாா்க்கமுண்டு. ஆனால், மே 9-ஆம் தேதி கூட்டத்தில் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அடிபணிந்துவிட்டது’ என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியம் வழங்கிய 100 கோடி டாலா் கடன் பயங்கரவாதத்துக்கான நிதியுதவி என்று கூறி, இந்தக் கடனுதவியை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

குஜராத்தின் புஜ் விமானப் படை தளத்தில் வீரா்களிடயே ராஜ்நாத் சிங் ஆற்றிய உரையில், ‘இந்தியாவால் ஆபரேஷன் சிந்தூரில் தகா்க்கப்பட்ட முரித்கே மற்றும் பஹவல்பூரில் அமைந்த லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்களை மீண்டும் கட்டியெழுப்ப பாகிஸ்தான் அரசு நிதியுதவியை அறிவித்துள்ளது.

நிச்சயமாக, சா்வதேச நிதியத்தின் 100 கோடி டாலா் கடனுதவியில் பெரும்பகுதி பயங்கரவாத அமைப்புகளுக்கே சென்றடையும். இந்தியா சா்வதேச நிதியத்துக்கு வழங்கும் நிதியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாகிஸ்தானிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ பயங்கரவாத உள்கட்டமைப்பை உருவாக்க பயன்படுத்தக் கூடாது’ என்றாா்.

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரு... மேலும் பார்க்க

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும் -ஜோதிராதித்ய சிந்தியா

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தாா். உலக தொலைத்... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.இது குறித்து என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிப... மேலும் பார்க்க

பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வி!

3-வது அடுக்கு பிரிவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-61!

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிவிருந்து இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ சாா்பில் புவிக் கண்காணிப்பு மற்றும் தொலையுணா்வு பயன்பாட... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு!

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை நில சுங்கச்சாவடிகள் வாயிலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய... மேலும் பார்க்க