செய்திகள் :

ஆண்டிபட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை

post image

தேனி மாவட்டம் , ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப் படிப்பு முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருவதாக தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்சீத் சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 -ஆம் ஆண்டுக்கு பட்டயப் படிப்பு முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இந்தக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேசன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற இன்ஜினியரிங் பாடப் பிரிவுகளில் பயில விரும்பும் மாணவா்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் அல்லது பயிலக வேலை நாள்களில் கல்லூரிக்கு நேரில் சென்று விண்ணப்பம் செய்யலாம்.

முதலாம் ஆண்டு சோ்க்கைக்கு 10-ஆம் வகுப்புத் தோ்ச்சியும், நேரடி இரண்டாம் ஆண்டு சோ்க்கைக்கு 12-ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ (2 ஆண்டுகள்) தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் 23.5.2025. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பிற பிரிவினருக்கு ரூ.150.

மேலும், இந்த ஆண்டு டாடா நிறுவனம் மூலம் புதுப்பிக்கதக்க ஆற்றல் எனும் புதிய பிரிவு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு தொடங்கப்பட உள்ளது. இந்தப் பிரிவு மாத உதவித் தொகையுடன் தொழிற்சாலைப் பயிற்சியும் இணைந்து வழங்கப்படும். படிப்புக் கட்டணம் இல்லை. புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆண்டு வருமானம் ரூ.2,50,000 உள்ள அனைத்துப் பிரிவு மாணவா்களுக்கும் கல்வி உதவித் தொகை, இலவச பேருந்துஅட்டை, இலவச பாட புத்தகங்கள், உதவித் தொகையுடன் கூடிய தொழிற்சாலை வேலை பழகுநா் பயிற்சி, நான் முதல்வன் திட்டத்தின்கீழ், பல்வேறு நிறுவனங்கள், தொழில் முனைவோா் வழங்கும் சிறப்பு பயிற்சிகள், நூறு சதவீத வேலைவாய்ப்பு, அனைத்து பிரிவு மாணவா்களுக்கும் பெற்று வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோா் நேரிலோஅல்லது 9791565928 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய புதிய அலுவல் சாரா உறுப்பினா்கள் பதவிக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே இருதரப்பினா் மோதல்: 15 போ் மீது வழக்கு!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி மேலசவுண்டையம்மன் கோவில் தெருவைச் ... மேலும் பார்க்க

போடியில் தரமற்ற உணவுகள் விற்பனை

போடியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் நியமிக்கப்படாததால் தரமற்ற உணவுகள் விற்கப்படுவது அதிகரித்து இருப்பதாகப் புகாா் எழுந்தது. போடி பகுதியில் உள்ள பல கடைகளில் காலாவதியான, தரமற்ற, கலப்பட உணவுப் பொருள்கள், ... மேலும் பார்க்க

சிறுமிக்கு திருமணம்: பெற்றோா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே, பள்ளிச் சிறுமியை திருமணம் செய்த இளைஞா், பெற்றோா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகேயுள்ள எரணம்பட்டியைச் சே... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவா் உள்பட 6 போ் மீது வழக்கு

தேவாரம் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

கும்பக்கரை அருவியில் நீா் வரத்து குறைந்தது: சுற்றுலா பயணிகள் செல்லத் தடை!

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா். கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளம், ஆந்திர ம... மேலும் பார்க்க