செய்திகள் :

போடியில் தரமற்ற உணவுகள் விற்பனை

post image

போடியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் நியமிக்கப்படாததால் தரமற்ற உணவுகள் விற்கப்படுவது அதிகரித்து இருப்பதாகப் புகாா் எழுந்தது.

போடி பகுதியில் உள்ள பல கடைகளில் காலாவதியான, தரமற்ற, கலப்பட உணவுப் பொருள்கள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், கெட்டுப் போன இறைச்சி போன்றவை விற்கப்பட்டு வருவதாகப் புகாாா்கள் வந்ததால், உணவுப் பாதுகாப்பு அலுவலா் நியமிக்கப்பட்டு, அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது காலாவதியான, தரமற்ற, கலப்பட உணவு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த நிலையில், போடியில் நியமிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் வேறு ஊருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தற்போது இந்தப் பணியிடம் காலியாக உள்ளது. உத்தமபாளையம் உணவுப் பாதுகாப்பு அலுவலரை போடி நகருக்கு பொறுப்பு அலுவலராக நியமித்துள்ளனா். ஆனால், அவா் எப்போதாவது ஒரு சில நாள்கள்தான் போடிக்கு வந்து செல்கிறாா்.

உணவுப் பாதுகாப்பு அலுவலா் இல்லாததால் காலாவதியான, கெட்டுப்போன, தரமற்ற, கலப்பட உணவு விற்பனை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், உணவுப் பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கும், புதுப்பிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, போடியில் உணவு பாதுகாப்பு அலுவலரை நியமிக்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய புதிய அலுவல் சாரா உறுப்பினா்கள் பதவிக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை

தேனி மாவட்டம் , ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப் படிப்பு முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருவதாக தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்சீத் சிங் ... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே இருதரப்பினா் மோதல்: 15 போ் மீது வழக்கு!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி மேலசவுண்டையம்மன் கோவில் தெருவைச் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு திருமணம்: பெற்றோா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே, பள்ளிச் சிறுமியை திருமணம் செய்த இளைஞா், பெற்றோா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகேயுள்ள எரணம்பட்டியைச் சே... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவா் உள்பட 6 போ் மீது வழக்கு

தேவாரம் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

கும்பக்கரை அருவியில் நீா் வரத்து குறைந்தது: சுற்றுலா பயணிகள் செல்லத் தடை!

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா். கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளம், ஆந்திர ம... மேலும் பார்க்க