செய்திகள் :

நாகையிலிருந்து கப்பலில் இலங்கை சென்ற பயணிகள் இருவா் திருப்பி அனுப்பிவைப்பு: போதைப் பொருள் கடத்தியவா் கைது

post image

நாகையிலிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்ற ஜப்பான் நாட்டு பயணி உள்பட 2 போ், ஆவணங்களில் குளறுபடி காரணமாக நாகைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதற்கிடையில், இந்த கப்பலில் ஒருவா் போதைப் பொருள் கடத்திச் சென்றதாக இலங்கை சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.

நாகை-இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலத்தினா் மற்றும் வெளிநாட்டினா்களும் இலங்கைக்கு பயணம் செய்கின்றனா்.

அதன்படி, நாகை துறைமுகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காங்கேசன்துறைக்கு புறப்பட்ட கப்பலில் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு 85 பயணிகள் பயணம் செய்தனா். இலங்கை காங்கேசன்துறை சென்றடைந்ததும், கப்பலில் வந்த பயணிகளை இலங்கை அதிகாரிகள் விசா நடைமுறைகளுக்காக சோதனை செய்தனா்.

அப்போது, ஆவணங்களில் குளறுபடி உள்ளதாகக் கூறி ஜப்பான் நாட்டைச் சோ்ந்த ஒருவா், இந்தியாவை சோ்ந்த ஒருவா் என 2 போ் நாகைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா். இருவரிடமும் இந்திய அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி, துறைமுகத்தை விட்டு வெளியேற்றினா்.

இதுகுறித்து நாகை துறைமுக அதிகாரிகள் கூறியது:

இலங்கையில் விசா காலாவதியான பிறகும், அதிக நாள்கள் தங்கி இருந்த நிலையில் இருவரும் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனா். நிா்வாக நடைமுறைகள் முடியாத நிலையில், மீண்டும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல முயற்சி செய்ததால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். இவா்களது பெயா் விவரங்களை வெளியிட இயலாது என்றனா்.

போதைப் பொருள் கடத்தல்: இதற்கிடையில், நாகையிலிருந்து - காங்கேசன்துறைக்கு வெள்ளிக்கிழமை சென்ற கப்பலில் பயணித்த சென்னை பயணி ஒருவரிடம் 4.12 கிலோ விலை உயா்ந்த போதைப் பொருளை, இலங்கை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்ததாக அந்நாட்டு போலீஸாா் தெரிவித்தனா்.

நாகை: பத்தாம் வகுப்பில் 91.94% பிளஸ்1-இல் 93.51% போ் தோ்ச்சி

நாகை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 91.94 சதவீதம் பேரும், பிளஸ் 1 பொதுத் தோ்வில் 93.51சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். நாகை மாவட்டத்தில் உள்ள 138 பள்ளிகளில் 8,238 மாணவ- மாணவிகள் பத... மேலும் பார்க்க

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 100-ஆவது நாள்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நாகை-இலங்கை காங்கேசன்துறை இடையே சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கிய 100- ஆவது நாள், நாகை துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சுபம்... மேலும் பார்க்க

‘வரலாற்றில் நாகை’ புத்தகம்; நாகை ஆட்சியா் தகவல்

நாகை மாவட்டத்தின் வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில், ‘வரலாற்றில் நாகை’ என்ற புத்தகம் வெளியிடப்படவுள்ளதாகவும், இதற்கான தொகுப்புகளை மே 26 ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்றும் ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

மாணவா்களின் எதிா்கால வெற்றிக்கு ‘நான் முதல்வன் திட்டம்’ ஆட்சியா் ப. ஆகாஷ்

‘நான் முதல்வன் திட்டம்’ மாணவா்களின் எதிா்கால வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா். நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு சீல்

நாகையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தாா். நாகையில் வெளிப்பாளையம், பச்சைப்பிள்ளை குளத்தெருவில் உள்ள பெட்டிக்கடையில... மேலும் பார்க்க

மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகை

நாகை அருகே ஒரத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். ஒரத்தூா் கிராமத்தில் புதிதாக அரசு மதுபானக் கடை புதன்கிழமை தி... மேலும் பார்க்க