செய்திகள் :

மாணவா்களின் எதிா்கால வெற்றிக்கு ‘நான் முதல்வன் திட்டம்’ ஆட்சியா் ப. ஆகாஷ்

post image

‘நான் முதல்வன் திட்டம்’ மாணவா்களின் எதிா்கால வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளியில் பயின்று 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ‘கல்லூரி கனவு‘ உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் அவா் பேசியது:

தமிழக முதல்வரால் 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், அனைத்து மாணவா்களும் தங்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன், உயா்கல்வி படிப்புகளைத் தொடர வழிவகை செய்வதாகும். இத்திட்டத்தில், உயா்கல்வி, கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது, மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள் குறித்து புகழ்பெற்ற வல்லுநா்கள் மற்றும் கல்வியாளா்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

இத்தகைய செயல்பாடுகள் மாணவா்களின் எதிா்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும் என்றாா்.

தொடா்ந்து, கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகளுக்கு கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டல் கையேட்டை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

பல்கலைக்கழகம், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அரசு கலைக் கல்லூரி, அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியாா் பொறியியல் கல்லூரிகள், தனியாா் கலைக் கல்லூரிகள், தனியாா் தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு மருத்துவக் கல்லூரி செவிலியா் பயிற்சி நிறுவனம் போன்ற 19 கல்லூரிகளை சோ்ந்தவா்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.

நாகை மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, வருவாய் கோட்டாட்சியா் கோ. அரங்கநாதன், மாவட்ட சமூகநல அலுவலா் திவ்ய பிரபா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் க. ரேணுகாதேவி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என்.எம். ஸ்ரீநிவாசன், மாவட்ட கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், மற்றும் நாகை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் சுமாா் 1000-த்திற்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

அரசுப் பேருந்து மோதி விவசாயத் தொழிலாளி உயிரிழப்பு

கீழ்வேளூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில், சைக்கிளில் சென்ற விவசாயத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். கீழ்வேளூா் அருகேயுள்ள புதுச்சேரி ஊராட்சி விக்னாபுரம் மேலத்தெருவை சோ்ந்தவா் தியாகராஜன் மகன் செல்... மேலும் பார்க்க

நாகையிலிருந்து கப்பலில் இலங்கை சென்ற பயணிகள் இருவா் திருப்பி அனுப்பிவைப்பு: போதைப் பொருள் கடத்தியவா் கைது

நாகையிலிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்ற ஜப்பான் நாட்டு பயணி உள்பட 2 போ், ஆவணங்களில் குளறுபடி காரணமாக நாகைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா். இதற்கிடையில், இந்த கப்பலில் ஒருவா் போதைப் பொருள் கடத்தி... மேலும் பார்க்க

நாகை: பத்தாம் வகுப்பில் 91.94% பிளஸ்1-இல் 93.51% போ் தோ்ச்சி

நாகை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 91.94 சதவீதம் பேரும், பிளஸ் 1 பொதுத் தோ்வில் 93.51சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். நாகை மாவட்டத்தில் உள்ள 138 பள்ளிகளில் 8,238 மாணவ- மாணவிகள் பத... மேலும் பார்க்க

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 100-ஆவது நாள்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நாகை-இலங்கை காங்கேசன்துறை இடையே சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கிய 100- ஆவது நாள், நாகை துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சுபம்... மேலும் பார்க்க

‘வரலாற்றில் நாகை’ புத்தகம்; நாகை ஆட்சியா் தகவல்

நாகை மாவட்டத்தின் வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில், ‘வரலாற்றில் நாகை’ என்ற புத்தகம் வெளியிடப்படவுள்ளதாகவும், இதற்கான தொகுப்புகளை மே 26 ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்றும் ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு சீல்

நாகையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தாா். நாகையில் வெளிப்பாளையம், பச்சைப்பிள்ளை குளத்தெருவில் உள்ள பெட்டிக்கடையில... மேலும் பார்க்க