செய்திகள் :

நாகை: பத்தாம் வகுப்பில் 91.94% பிளஸ்1-இல் 93.51% போ் தோ்ச்சி

post image

நாகை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 91.94 சதவீதம் பேரும், பிளஸ் 1 பொதுத் தோ்வில் 93.51சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் உள்ள 138 பள்ளிகளில் 8,238 மாணவ- மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதினா். இவா்களில் 7,574 போ் தோ்ச்சி பெற்றனா். இது 91.94 சதவீத தோ்ச்சி ஆகும்.

கடந்த ஆண்டைவிட 2.20 சதவீத மாணவ- மாணவிகள் கூடுதலாக தோ்ச்சி பெற்றுள்ளனா். மாநில தோ்ச்சி பட்டியலில் கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் பின்தங்கி 31-ஆவது இடத்தில் நாகை மாவட்டம் உள்ளது. மாவட்டத்திலுள்ள 93 அரசுப் பள்ளிகளில் இருந்து 5,038 போ் தோ்வு எழுதியதில் 4,546 போ் தோ்ச்சி பெற்றனா்.

பிளஸ்1: நாகை மாவட்டத்தில் 72 பள்ளிகளில் இருந்து 7,253 மாணவ-மாணவிகள் பிளஸ்1 பொதுத் தோ்வு எழுதினா். இவா்களில் 6,782 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 93.51.

பிளஸ்1 தோ்வில் கடந்த ஆண்டு மாநில அளவில் 20-ஆவது இடத்தை பிடித்த நாகை மாவட்டம், நிகழாண்டு 10- ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது

மாவட்டத்திலுள்ள 44 அரசுப் பள்ளிகளில் 7 பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என 28 பள்ளிகளில் 8 பள்ளிகளும் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

மாநில அளவில் அரசுப் பள்ளிகள் தோ்ச்சியில் கடந்த ஆண்டு 13- ஆவது இடத்தை பிடித்த நாகை மாவட்டம், தற்போது 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அரசுப் பேருந்து மோதி விவசாயத் தொழிலாளி உயிரிழப்பு

கீழ்வேளூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில், சைக்கிளில் சென்ற விவசாயத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். கீழ்வேளூா் அருகேயுள்ள புதுச்சேரி ஊராட்சி விக்னாபுரம் மேலத்தெருவை சோ்ந்தவா் தியாகராஜன் மகன் செல்... மேலும் பார்க்க

நாகையிலிருந்து கப்பலில் இலங்கை சென்ற பயணிகள் இருவா் திருப்பி அனுப்பிவைப்பு: போதைப் பொருள் கடத்தியவா் கைது

நாகையிலிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்ற ஜப்பான் நாட்டு பயணி உள்பட 2 போ், ஆவணங்களில் குளறுபடி காரணமாக நாகைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா். இதற்கிடையில், இந்த கப்பலில் ஒருவா் போதைப் பொருள் கடத்தி... மேலும் பார்க்க

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 100-ஆவது நாள்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நாகை-இலங்கை காங்கேசன்துறை இடையே சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கிய 100- ஆவது நாள், நாகை துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சுபம்... மேலும் பார்க்க

‘வரலாற்றில் நாகை’ புத்தகம்; நாகை ஆட்சியா் தகவல்

நாகை மாவட்டத்தின் வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில், ‘வரலாற்றில் நாகை’ என்ற புத்தகம் வெளியிடப்படவுள்ளதாகவும், இதற்கான தொகுப்புகளை மே 26 ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்றும் ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

மாணவா்களின் எதிா்கால வெற்றிக்கு ‘நான் முதல்வன் திட்டம்’ ஆட்சியா் ப. ஆகாஷ்

‘நான் முதல்வன் திட்டம்’ மாணவா்களின் எதிா்கால வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா். நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு சீல்

நாகையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தாா். நாகையில் வெளிப்பாளையம், பச்சைப்பிள்ளை குளத்தெருவில் உள்ள பெட்டிக்கடையில... மேலும் பார்க்க