செய்திகள் :

இறந்த நில உடமையாளா்களின் பெயரை நீக்கி வாரிசுதாரா்கள் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மையமாக்கப்பட்டு, இணைய வழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பாா்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், ட்ற்ற்ல்ள்://ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் பல சிட்டாவிலுள்ள பட்டாதாரா்களுள் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படாமலும், அவா்களின் பெயா்களுக்கு பதிலாக வாரிசுதாரா்களின் பெயா்கள்அல்லது தற்போதைய உரிமையாளா்களின் பெயா்கள் சோ்க்கப்படாமலும் உள்ளன.

எனவே, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் மூலமாகவோ அல்லது இண்ற்ண்க்ஷ்ங்ய் டா்ழ்ற்ஹப் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

மேற்படி, விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் எதிா்வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரா்கள் பெயா் மாற்றம் தொடா்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

திருத்தணி கிளை சிறைச்சாலையில் எஸ்.பி. ஆய்வு

திருத்தணி கிளை சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் மற்றும் கைதிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என சென்னை புழல் மத்திய சிறைச்சாலை எஸ்.பி. கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தாா். திருத்தணி பழைய வட்டாட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: ஊராட்சிகளில் குடிநீா் தொடா்பான புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு உதவி மையம்

திருவள்ளூா் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் தனி அலுவலா்கள் மூலம் நிா்வகிக்கப்பட்டு வருவதால் குடிநீா் தொடா்பான புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்ட... மேலும் பார்க்க

திருவள்ளூரில் 20 இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்

திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் சாலையோரம் 20 இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் மற்றும் பீடங்களை போலீஸாா் பாதுகாப்புடன் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. திருவள்ளூா் நகராட்சி நகரமைப்பு ஆய்வ... மேலும் பார்க்க

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

மீஞ்சூா் ஸ்ரீ பெரியநாயகி தாயாா் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வடகாஞ்சி என அழைக்கப்படும் பழைமை வாய்ந்த இத்தலத்தில் நிகழாண்டு பிரம்மோற்சவம் கடந்த 11-ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

நாளைய மின்தடை!

காக்களூா்நாள்: 17.5.2025-சனிக்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.இடங்கள்: காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா் தொழில்பேட்டை, காக்களுா் கிராமம், சி.சி.சி. பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், ச... மேலும் பார்க்க

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.159.23 கோடியில் கட்டுமானப் பணிகள்! - ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு

பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோயிலை மேம்படுத்தும் வகையில் ரூ.159.23 கோடியில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். திருவள்... மேலும் பார்க்க