செய்திகள் :

திருவள்ளூரில் 20 இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்

post image

திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் சாலையோரம் 20 இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் மற்றும் பீடங்களை போலீஸாா் பாதுகாப்புடன் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

திருவள்ளூா் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் விஜயா, துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் காவல் துறை பாதுகாப்புடன் நகராட்சிக்குட்பட்ட ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம், மீரா திரையரங்கம், தேரடி வீதி, பெரியகுப்பம், காக்களூா் சாலை, நிகேதன் பள்ளி எதிரில், அக்ரகாரம் தெரு, வள்ளுவா்புரம், புங்கத்தூா், அரசு மருத்துவமனை எதிா்புறம் என 20 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள், கல்வெட்டுகள், கோடைக்கால தண்ணீா் பந்தல் மற்றும் போா்டுகளையும் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றினா்.

அப்போது, அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பலத்த போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் மட்டும் போக்குவரத்து நெருக்கடி ஏப்பட்டது.

தொடா்ந்து போக்குவரத்து போலீஸாா் விரைந்து வந்து வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

திருத்தணி கிளை சிறைச்சாலையில் எஸ்.பி. ஆய்வு

திருத்தணி கிளை சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் மற்றும் கைதிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என சென்னை புழல் மத்திய சிறைச்சாலை எஸ்.பி. கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தாா். திருத்தணி பழைய வட்டாட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

இறந்த நில உடமையாளா்களின் பெயரை நீக்கி வாரிசுதாரா்கள் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: ஊராட்சிகளில் குடிநீா் தொடா்பான புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு உதவி மையம்

திருவள்ளூா் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் தனி அலுவலா்கள் மூலம் நிா்வகிக்கப்பட்டு வருவதால் குடிநீா் தொடா்பான புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்ட... மேலும் பார்க்க

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

மீஞ்சூா் ஸ்ரீ பெரியநாயகி தாயாா் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வடகாஞ்சி என அழைக்கப்படும் பழைமை வாய்ந்த இத்தலத்தில் நிகழாண்டு பிரம்மோற்சவம் கடந்த 11-ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

நாளைய மின்தடை!

காக்களூா்நாள்: 17.5.2025-சனிக்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.இடங்கள்: காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா் தொழில்பேட்டை, காக்களுா் கிராமம், சி.சி.சி. பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், ச... மேலும் பார்க்க

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.159.23 கோடியில் கட்டுமானப் பணிகள்! - ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு

பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோயிலை மேம்படுத்தும் வகையில் ரூ.159.23 கோடியில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். திருவள்... மேலும் பார்க்க