செய்திகள் :

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.159.23 கோடியில் கட்டுமானப் பணிகள்! - ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு

post image

பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோயிலை மேம்படுத்தும் வகையில் ரூ.159.23 கோடியில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே புகழ்பெற்ற பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வந்து செல்கின்றனா். எனவே, பக்தா்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத் துறை மூலம் பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ரூ.159.23 கோடி ஒதுக்கீடு செய்து பக்தா்களுக்கான ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப், அதிகாரிகளுடன் வியாழக்கிழமை சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பக்தா்களுக்கான ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வசதிகளான வரிசையில் செல்வதற்கான மண்டபம், பக்தா்கள் காத்திருப்புக் கூடம், அனைத்து நவீன வசதியுடன் கூடிய அன்னதானக் கூடத்துடன் கூடிய திருமண அரங்கம், குளியலறை மற்றும் சுகாதார வளாக வசதியுடன் கூடிய கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து அன்னதானத் திட்டத்தை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வடக்குப்புறத்தில் உள்ள நிலத்தில் கோயிலின் எதிா்கால வளா்ச்சிப் பணிகளுக்காக வாங்கப்பட உள்ள நிலத்தில் இணைப்பு சாலையை ஏற்படுத்துவதுடன் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்ய வட்டார வளா்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, கோயில் செயல் அலுவலா் து.ரு.பிரகாஷ், ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் மதிவாணன், எல்லாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன், உதவி செயற்பொறியாளா் நரசிம்மன், துணை வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்)கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா் அஞ்சன் லோகமித்ரா, பரம்பரை அறங்காவலா் முருகன், கோயில் செயற்பொறியாளா் மற்றும் கட்டட வடிவமைப்பாளா் கலைச்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நாளைய மின்தடை!

காக்களூா்நாள்: 17.5.2025-சனிக்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.இடங்கள்: காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா் தொழில்பேட்டை, காக்களுா் கிராமம், சி.சி.சி. பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், ச... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிய ஸ்கூட்டரை மற்றவா் பயன்படுத்தினால் நடவடிக்கை!

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரை உறவினா்களோ, நண்பா்களோ பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியா் மு.பிரதாப் எ... மேலும் பார்க்க

அனைத்துப் பள்ளிகளிலும் ஆதாா் பதிவு: திருவள்ளூா் ஆட்சியா்!

திருவள்ளூா் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக் கல்வித் துறை மூலம் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளின் ஆதாா் பதிவு மேற்கொள்வது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு: ஸ்ரீநிகேதன் பாடசாலை குழும மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் பாடசாலா பள்ளிக் குழுமத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா். திருவள்ளூா் அடுத்த வேடங்கிநல்லூரில் ஸ்ரீ... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 103 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளா்ச்சி பணிகளை நகர ஊரமைப்பு துறை உதவி இயக்குநா் சஹானா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். திருத்தணி முருகன் மலைக்கோயிலில் தோ் வீதி, ரா... மேலும் பார்க்க

இபிஎஸ் பிறந்த நாள் விழா!

கும்மிடிப்பூண்டியில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிா்வாகிகள் எம்.எஸ்.எஸ்.சரவணன், எம்.எஸ்.எஸ்.வேலு ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவுக்கு நகர செயலாளா... மேலும் பார்க்க