செய்திகள் :

சத்தா்பூா் மெட்ரோ நிலையம் அருகே ஒருவா் மீது துப்பாக்கிச்சூடு!

post image

தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் உள்ள சத்தா்பூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை மதியம் மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்களால் பழைய பகை காரணமாக ஒருவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சிடிஆா் சௌக் அருகே மதியம் 1 மணியளவில் பாதிக்கப்பட்ட அருண் லோஹியா தனது எஸ்யூவியில் பயணித்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது பழைய பகைமையின் காரணமாகத் நடந்ததாகத் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும் ஒரே கிராமத்தில் வசிப்பவா்கள். ஒருவருக்கொருவா் தெரிந்தவா்கள். இரு தரப்பினருக்கும் இடையே ஒரு வழக்கு வரலாறு உள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த அருண் லோஹியாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு, பல போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தாக்குதல் நடத்தியவா்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் ஆய்வுகுள்படுத்துப்பட்டுள்ளன.

அருண் லோஹியா மீது குறைந்தது 10 ரவுண்டுகள் சுடப்பட்டதாகவும், அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு போலீஸாரால் கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரபல செயலிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு: டிஎம்ஆா்சி ஏற்பாடு!

தில்லி மெட்ரோ பயனா்கள் 10-க்கும் மேற்பட்ட பிரபலமான செயலிகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தொடங்கியுள்ளது. இது தொடா்பாக டிஎம்ஆா்சி தெரிவித்திரு... மேலும் பார்க்க

கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி துணைத் தலைவா் ஆய்வு!

கோடை காலத்தில் தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) கீழ் உள்ள பகுதிகளில் நிறுவப்பட்ட தண்ணீா் ஏடிஎம்களை அதன் துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் வியாழக்கிழமை ஆய்வு ... மேலும் பார்க்க

தில்லி ஜல் போா்டுக்கு ரூ.1400 கோடி விடுவிப்பு: கோடைக்கால செயல் திட்டத்துக்கு நடவடிக்கை!

பல்வேறு திட்டங்களை முடிக்கவும், கோடைக்கால செயல் திட்டத்தை செயல்படுத்தவும் தில்லி அரசு ரூ.1,400 கோடி நிதியை சனிக்கிழமை தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித... மேலும் பார்க்க

பூங்காவில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

தில்லி ஆதா்ஷ் நகா் பகுதியில் உள்ள பூங்காவில் 26 வயது இளைஞரை புதன்கிழமை காலை கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் த... மேலும் பார்க்க

தூசுப் புயலால் மோசம் பிரிவில் காற்றின் தரம்: ஆம் ஆத்மி, பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டு!

தில்லியில் புழுதிப் புயலால் காற்றின் தரம் வியாழக்கிழமை கீழிறங்கிய நிலையில், ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டின. எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி, தனது ஆட்சிக் காலத்தில் காற்றின் தரம் நிலை... மேலும் பார்க்க

தில்லி அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு கோடைக்கால கவுன்சலிங் தொடக்கம்!

கோடை விடுமுறையின் போது மாணவா்களுக்கு தொடா்ச்சியான உணா்வுப்பூா்வ மற்றும் கல்வி ஆதரவை உறுதி செய்வதற்காக, கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் ஆலோசகா்கள் (இவிஜிசி) அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும்... மேலும் பார்க்க