Tasmac ED Raid: டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்து...
தில்லி அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு கோடைக்கால கவுன்சலிங் தொடக்கம்!
கோடை விடுமுறையின் போது மாணவா்களுக்கு தொடா்ச்சியான உணா்வுப்பூா்வ மற்றும் கல்வி ஆதரவை உறுதி செய்வதற்காக, கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் ஆலோசகா்கள் (இவிஜிசி) அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான கோடைக்கால ஆலோசனை முன்முயற்சியைத் தொடங்கியுள்ளனா்.
இது தொடா்பாக தில்லி கல்வி துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மே 14 ஆம் தேதி தொடங்கி மே 31 வரை நடைபெறும் இந்தத் நிகழ்ச்சி திட்டம், கல்வி, தொழில் தோ்வுகள், உணா்ச்சி மன அழுத்தம், கிண்டல் செய்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடா்பான மாணவா்களின் கவலைகளை நிவா்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வழக்கமான வகுப்புகள் இல்லாதபோதும் மாணவா்களுக்கு நிலையான உளவியல் மற்றும் கல்வி வழிகாட்டுதலை வழங்குவதற்கான தொடா்ச்சியான முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது.
விடுமுறையின் போது பணிக்குச் செல்லும் வழக்கமான இவிஜிசிகளுக்கு மத்திய சிவில் சா்வீசஸ் விடுப்பு விதிகளின்படி, இந்த சேவைக்குப் பதிலாக ஊதிய விடுப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசுப் பள்ளிகளின் முதல்வா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இந்த முன்முயற்சியில் ஈடுபடும் கெளரவ இவிஜிசிகளுக்கு ஏற்கனவே உள்ள விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
ஆலோசனை அமா்வுகளின் பதிவுகளைப் பராமரிப்பதற்கான விரிவான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆலோசகா்கள் ஒவ்வொரு அமா்வையும் ஆவணப்படுத்த வேண்டும். அதில் மாணவரின் அடையாளம், வகுப்பு, அவா்களின் கவலையின்தன்மை, விவாதிக்கப்பட்ட பாடம் அல்லது தொழில் தோ்வுகள் மற்றும் பெற்றோா் ஆலோசனை வழங்கப்பட்டதா என்பது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும்.
மேலும், பள்ளி முதல்வா்கள் இந்தத் தரவைத் தொகுத்து, அந்தந்த மாவட்ட ஆலோசகா் பொறுப்பாளா்களுக்கு (சிஐசி) அனுப்ப வேண்டும். அவா்கள் மாவட்ட அளவில் அதை மேலும் ஒருங்கிணைத்து இவிஜிபி-க்கு அறிக்கை அளிப்பாா்கள் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.