செய்திகள் :

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!

post image

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1,361 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 3,306 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் திறப்பைவிட வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று காலை 108.06 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 108.18 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 75.84 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க | உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: 6 மத்திய சிறைகளில் 100% தேர்ச்சி!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 16) வெளியான நிலையில், 6 மத்திய சிறைகளில் 100% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் இனறு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். மேலும் பார்க்க

'2026 மட்டுமல்ல 2031, 2036-லும் திமுக ஆட்சிதான்' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். உதகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 16) காலை நடைபயிற்சி மேற்கொ... மேலும் பார்க்க

பிரபல சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு: 17-ஆவது இடத்தைப் பிடித்த திருப்பூர்!

திருப்பூர்: 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 94.84 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 17-ஆவது இடத்தைத் திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது.தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வ... மேலும் பார்க்க

தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்ய வாய்ப்பு!

தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் தென்காசி வெதர்மேன் ராஜா தகவல் தெரிவித்துள்ளார். தென்மேற்குப் பருவக்காற்று என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் இன்றியம... மேலும் பார்க்க