செய்திகள் :

``கணவரை காணவில்லை'' - காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் நாடகம்.. விசாரணையில் பகீர்!

post image

உத்தரப்பிரதேசத்தில் காதலன் துணையோடு பெண்கள், கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில்,முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை அவரது மனைவி காதலனோடு சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் பகதுர்புர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மாயா(50). இவரது கணவர் தேவேந்திர குமார், முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

மாயா கடந்த 10-ம் தேதி தனது கணவரை காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் அங்குள்ள கரீட் என்ற கிராமத்தில் தேவேந்திர குமார் உடலின் ஒரு பகுதி கிடைத்தது. உடம்பில் இருந்து தலை துண்டித்து எடுக்கப்பட்டு இருந்தது. மேற்கொண்டு தேடியபோது அருகில் உள்ள கிணற்றில் உடம்பின் மேலும் சில பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இது குறித்து தேவேந்திர குமாரின் மனைவி மாயாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர்தான் இப்படுகொலையை செய்தது தெரிய வந்தது.

மாயா தனது காதலன் அனில் என்பவனுடன் சேர்ந்து இக்கொலையை செய்துள்ளார். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சதீஷ் மற்றும் மிதிலேஷ் ஆகியோருடன் சேர்ந்து இப்படுகொலையை செய்துள்ளனர்.

கொலை செய்து உடலை 6 துண்டாக வெட்டி அதனை ஒவ்வொரு இடத்திலும் எடுத்துச் சென்று போட்டுள்ளனர். அதில் தலையை ஆற்றில் தூக்கிப்போட்டு இருப்பது தெரியதுள்ளது. நீச்சல் வீரர்கள் துணையோடு போலீஸார் தலையை தேடி வருகின்றனர்.

கைது
கைது

போலீஸார் மாயா உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அனிலையும் அவனது கூட்டாளியையும் பிடிக்கச் சென்ற போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அனில் காலில் காயம் ஏற்பட்டது.

சமீபத்தில்தான் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் தனது காதலனோடு சேர்ந்து தன் கணவனை கொலை செய்து சிமெண்ட் டிரம்பில் அடித்து வைத்தார். இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு அடுத்து தொடர்ந்து இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குப்பைத் தொட்டியில் சடலமாகக் கிடந்த ஒரு வயது பெண் குழந்தை; விசாணையில் போலீஸார்-நடந்தது என்ன?

உத்திரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்குமார்- காஜல் தம்பதி. இவர்களுக்கு ஆர்கேஷ் (4) என்ற மகனும் மஹி (1) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர், வீரபாண்டி, சுண்டமேடு ப... மேலும் பார்க்க

விருதுநகர் அரசு மருத்துவமனை: கையை அறுத்து போக்சோ கைதி செய்த விபரீதம்.. நடந்தது என்ன?

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போக்சோ வழக்கு கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சிவகாசி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 57), பள்ளி சிறுமி ஒருவரை ... மேலும் பார்க்க

காரில் வைக்கும்படி முதலாளி கொடுத்த ரூ.1.51 கோடி; கோயில் உண்டியலில் போட்ட டிரைவர் - ஷாக்கான ஆடிட்டர்

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் வசிக்கும் ஆடிட்டர் ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்தவர் ராஜேஷ். இதனால் ராஜேஷ் மீது ஆடிட்டருக்கு மிகவும் நம்பிக்கை உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

கரூர்: பள்ளி தாளாளருக்கு 23 ஆண்டுகள்; தமிழ் ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் - போக்சோ வழக்கில் அதிரடி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பூஞ்சோலைப்புதூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பாப்பிரெட்டிபட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10 - ம் வகுப்பு பயின்று வந்தார். அப்போது , அப்பள்ளியில் பணிபுரிந்... மேலும் பார்க்க

நெல்லை பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கு; ஜாமீனில் சென்றவர்கள் தலைமறைவு - வழக்கு விசாரணை தொய்வு?

நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் தீபக்ராஜ். பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி, தனது தோழியுடன் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றபோது கொட... மேலும் பார்க்க

பிறந்தநாள் விழா அசைவ விருந்து: 40 பேருக்கு வாந்தி, மயக்கம்; ஒருவர் இறப்பு - புதுக்கோட்டையில் சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா ஏம்பல் அருகில் உள்ள வேளாணி கிராமத்தில் வசிப்பவர் சத்யராஜ். இவரது மூன்றாவது மகன் தேவரக்சன் என்பவரின் முதல் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது,... மேலும் பார்க்க