செய்திகள் :

பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

post image

பப்புவா நியூ கினியா நாட்டில் போலியோ தொற்று பரவுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள லேய் எனும் கடலோர நகரத்தில், வழக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, இரண்டும் ஆரோக்கியமான குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மிகவும் கொடிய போலியோ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பப்புவா நியூ கினியா நாட்டிற்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி கூறுகையில், இந்த நோய் பரவலைத் தடுக்க அதிகப்படியான முயற்சிகளை மேற்கொண்டு அந்நாட்டு குழந்தைகளுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டு அந்நாட்டில் போலியோ தொற்று முற்றிலும் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், 2018-ம் ஆண்டு அங்கு புதியதாக போலியோ தொற்றுக்கள் பதிவாகின. இருப்பினும், அதே ஆண்டில் முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

பப்புவா நியூ கினியா நாடானது இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்துடன் எல்லையைப் பகிர்ந்து வரும் நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள வைரஸ்-களும், இந்தோனேசியாவில் பரவி வரும் வைரஸ்-களும் மரபியல் ரீதியாக ஒத்துப்போவதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், நிகழாண்டின் (2025) இறுதிக்குள், 100 சதவிகித குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக பப்புவா நியூ கினியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் இலியாஸ் கபாவோரே தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் இந்த முயற்சிக்கு உலக சுகாதார அமைப்பு, ஐ.நா.வின் குழந்தைகள் ஆணையம் மற்றும் ஆஸ்திரேலியா அரசு ஆதரவளிப்பதாகக் கூறப்படுகிறது.

இதில்,பப்புவா நியூ கினியாவில் வாழும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சுமார் 35 லட்சம் மக்கள் இதன்மூலம் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி வைல்ட் போலியோ வைரஸின் வகை 2 மற்றும் வகை 3 கடந்த 1999 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் முற்றிலும் அழிக்கப்பட்டன.

2022-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், வகை 1 வைரஸ்களினால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகள் மட்டுமே பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தோனேசியா: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 20 பேர் பலி

‘பட்டினிச் சாவு அபாயத்தில் 30 கோடி போ்’

உலகளவில் 29.53 போ் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சா்வதேச உணவுப் பற்றாக... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல: டிரம்ப்

அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ‘இவ்விரு நாடுகள் இடையிலான பதற்றத்தைத் தணிக்க நான் மத்தியஸ்தம் செய்தே... மேலும் பார்க்க

சமூக வலைதள ‘போலி செய்தியை’ நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சா்!

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து கட்டுரை வெளியானதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் கூறியத... மேலும் பார்க்க

எவரெஸ்ட் மலையேற்றம்: இந்தியர் உள்பட 2 வீரர்கள் பலி!

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் 2 வீரர்கள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமய மலைத்தொடர்களில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் ஏறிய இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இன்று(மே 16) பேசியிருக்கிறார்.பாகிஸ்தானில் ராணுவத்தில் சேவையாற்றி உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான மே ... மேலும் பார்க்க

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!

காஸாவின் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது நேற்று (மே 15) நள்ளிரவு துவங்கிய இஸ்... மேலும் பார்க்க