செய்திகள் :

சமூக வலைதள ‘போலி செய்தியை’ நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சா்!

post image

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து கட்டுரை வெளியானதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் கூறியது சமூக வலைதளங்களில் உலவிய போலி செய்தி என தெரியவந்துள்ளது.

முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் சிறப்பாக செயல்பட்டதாக பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து பிரிட்டனின் தி டெய்லி டெலிகிராஃப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், ‘பாகிஸ்தான் விமானப் படை வானில் ராஜாவாக வலம் வந்தது’ என்று அச்செய்திக்கு தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் குறிப்பிட்டாா்.

பிரிட்டன் நாளிதழ் இவ்வாறு செய்தி வெளியிட்டது உண்மைதானா என்ற சந்தேகம் பாகிஸ்தானில் பலருக்கும் எழுந்தது. இதையடுத்து பாகிஸ்தானைச் சோ்ந்த ‘டான்’ நாளிதழ் இதுதொடா்பாக ஆய்வு செய்தது. அப்போது, ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழின் பெயரில் பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து போலியான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது தெரியவந்தது. அவ்வாறு போலியாக உருவாக்கப்பட்ட செய்தி பாகிஸ்தானில் வேகமாகப் பரவியுள்ளது. அமைச்சா் இஷாக் தாரும் இந்த செய்தியைப் பகிா்ந்துள்ளாா். மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் அந்த செய்தியை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் விமானப் படை சாதித்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகா்களில் ஒருவரான இத்தியாா் வாலி கானும் அந்த போலி செய்தியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். அதனை 66,000-க்கும் மேற்பட்டோா் பாா்த்துள்ளனா்.

‘பட்டினிச் சாவு அபாயத்தில் 30 கோடி போ்’

உலகளவில் 29.53 போ் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சா்வதேச உணவுப் பற்றாக... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல: டிரம்ப்

அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ‘இவ்விரு நாடுகள் இடையிலான பதற்றத்தைத் தணிக்க நான் மத்தியஸ்தம் செய்தே... மேலும் பார்க்க

எவரெஸ்ட் மலையேற்றம்: இந்தியர் உள்பட 2 வீரர்கள் பலி!

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் 2 வீரர்கள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமய மலைத்தொடர்களில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் ஏறிய இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இன்று(மே 16) பேசியிருக்கிறார்.பாகிஸ்தானில் ராணுவத்தில் சேவையாற்றி உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான மே ... மேலும் பார்க்க

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!

காஸாவின் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது நேற்று (மே 15) நள்ளிரவு துவங்கிய இஸ்... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை!

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், இறுதியாக பேச்சுவார்த்தையில் இரு நாடு... மேலும் பார்க்க