செய்திகள் :

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை!

post image

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், இறுதியாக பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபட்டன.

ரஷிய அதிபரோ உக்ரைன் அதிபரோ இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்காத நிலையில், 2 மணிநேரத்துக்குள்ளாகவே பேச்சுவார்த்தை முடிவு பெற்றது. இருப்பினும், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் தென்பட்டதாகத் தெரியவில்லை என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூறுகிறது.

துருக்கியில் உள்ள இஸ்தான்புலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஸெலென்ஸ்கி ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை. மாறாக, இரு நாட்டு பிரதிநிதிகளும்தான் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ரஷிய படைகளைத் திரும்பப் பெறுவதற்கு ஈடாக, சில ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை அந்நாட்டு பிரதிநிதிகள் முன்வைத்ததாக உக்ரைனிய அதிகாரி தெரிவித்தார். மேலும், இந்தப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் 1,000 போர்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டன.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, வெலோதிமீர் ஸெலென்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் பிரெட்சிக் மெர்ஸ், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ஆகியோர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு தொலைபேசி வாயிலாக விவாதித்தனர். இருப்பினும், இந்த உரையாடல் குறித்து எந்த தகவலும் பெறப்படவில்லை.

முன்னதாக, இந்த பேச்சுவார்த்தை குறித்து ஸெலென்ஸ்கி கூறியதாவது, ``இஸ்தான்புல்லில், இன்று ரஷிய பிரதிநிதிகளால் போர்நிறுத்தத்தை ஒப்புக்கொள்ள முடியாவிட்டால், புதின் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடவடிக்கையாக இராஜதந்திரத்தை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறார் என்பது நூறு சதவிகிதம் தெளிவாக தெரிந்து விடும்’’ என்று தெரிவித்தார்.

சமூக வலைதள ‘போலி செய்தியை’ நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சா்!

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து கட்டுரை வெளியானதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் கூறியத... மேலும் பார்க்க

எவரெஸ்ட் மலையேற்றம்: இந்தியர் உள்பட 2 வீரர்கள் பலி!

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் 2 வீரர்கள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமய மலைத்தொடர்களில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் ஏறிய இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இன்று(மே 16) பேசியிருக்கிறார்.பாகிஸ்தானில் ராணுவத்தில் சேவையாற்றி உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான மே ... மேலும் பார்க்க

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!

காஸாவின் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது நேற்று (மே 15) நள்ளிரவு துவங்கிய இஸ்... மேலும் பார்க்க

பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

பப்புவா நியூ கினியா நாட்டில் போலியோ தொற்று பரவுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள லேய் எனும் கடலோர நகரத்தில், வழக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட... மேலும் பார்க்க

இந்தோனேசியா: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 20 பேர் பலி

இந்தோனேசியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பு... மேலும் பார்க்க