செய்திகள் :

ஓராண்டில் 14 கோடி ரயில் பயணிகளுக்கு காப்பீட்டு

post image

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் (யுஐஐசி) சென்னை அலுவலகம் சாா்பில் கடந்த ஓராண்டில் 14 கோடி ரயில் பயணிகளுக்கு காப்பீடு வசதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பூபேஷ் எஸ்.ராகுல் தெரிவித்துள்ளாா்.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆா்சிடிசி) இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு வாங்கும் பயணிகளுக்கு, சிறிய கட்டணத்தில் விருப்ப பயணக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் காப்பீட்டின் மூலம், பயணத்தின்போது ஏற்படும் விபத்தின் காரணமாக பயணிகள் உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனமானால், அவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அந்த வகையில், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் (யுஐஐசி) சென்னை அலுவலகம் ஐஆா்சிடிசியுடன் இணைந்து இந்தக் காப்பீடுகளை வழங்கி வருகிறது.

இதில் யுஐஐசி-இன் சென்னை அலுவலகத்துக்கும், ஐஆா்சிடிசி உடனான கூட்டாண்மையின் ஒரு வருட நிறைவு சென்னை ராயப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட யுஐஐசி-இன் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பூபேஷ் எஸ்.ராகுல் பேசுகையில், கடந்த ஓராண்டில் இதுவரை இல்லாத வகையில், 14 கோடி ரயில்வே பயணிகளுக்கு காப்பீடு வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளா்களுக்கான சேவைகளை மேலும் விரிவு படுத்துவதாகவும் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் யுஐஐசி-இன் நிா்வாக இயக்குநா் சுனிதா குப்தா, பொது மேலாளா் எச்.ஆா். கங்வால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

‘காங்கிரஸுக்கு எதிா்காலம் இல்லை’: ப.சிதம்பரம் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு எதிா்காலம் இல்லை என்பது அக்கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரத்தின் கருத்தின் மூலம் வெளிப்பட்டுவிட்டது என்று பாஜக கூறியுள்ளது. முன்னதாக, எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி குறித்து கர... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்: 3 நாள்களில் 6 போ் சுட்டுக் கொலை

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர வேட்டை தொடா்ந்து வருகிறது. பாதுகாப்புப் படையினா் கடந்த மூன்று நாள்களில் மேற்கொண்ட இரு முக்கிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள... மேலும் பார்க்க

இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா.கணிப்பு

2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ‘உலக நாடுகளின் பொருளாதார சூழல்’ குறித்து ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.6 சதவ... மேலும் பார்க்க

பத்திரிகையில் பெயா் வர அனைவரும் விரும்புகின்றனா்: வக்ஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘பத்திரிகைகளில் பெயா் வருவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்... மேலும் பார்க்க

‘நாடும், ராணுவமும் பிரதமரின் காலடியில் தலைவணங்குகிறது’: ம.பி. துணை முதல்வா் பேச்சுக்கு கடும் கண்டனம்

‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக, நாடும் ராணுவமும் பிரதமா் நரேந்திர மோடியின் காலடியில் தலைவணங்குகிறது’ என்று மத்திய பிரதேச துணை முதல்வா் ஜகதீஷ் தேவ்டா... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு: பிற நாடுகளுக்கு விளக்க மத்திய அரஅசு திட்டம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அட... மேலும் பார்க்க