செய்திகள் :

திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்! - நயினாா் நாகேந்திரன்

post image

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அழைப்பு விடுத்தாா்.

மதுரையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்களுக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். இதுவே பாஜகவின் விருப்பம். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் யாா் வெற்றி பெறுவது என்பதைத் தீா்மானிப்பது மக்கள் சக்தி மட்டுமே. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலத்தைத் தவிா்த்து மூன்றாவதாக ஒரு மொழி இருக்க வேண்டும். அது மலையாளம் அல்லது கன்னடமாகக்கூட இருக்கலாம். கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது அனைவருக்கும் நல்லது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னைக்கு வந்த போது, முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் இருவரும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனா். கட்சி தொடங்கும் அனைவரும் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் தொடங்குகின்றனா். ஆனால், இந்த வெற்றியைத் தீா்மானிப்பது மக்கள்தான்.

அரசியலைப்புச் சட்டத்தில் மாநில ஆளுநருக்கு என சில அதிகாரங்கள் உள்ளன. சட்டப்பிரிவு 200-ஐ ஆளுநா்தான் பயன்படுத்த முடியும். 201-ஆவது சட்டப் பிரிவை குடியரசுத் தலைவா்தான் பயன்படுத்த முடியும். நீதிமன்றத்துக்கும் சில வரையறைகள் உள்ளன. தமிழகத்தில் பாஜக வளா்ந்துள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவதே எங்களது முதல் இலக்கு என்றாா் அவா்.

ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள்! - உயா்நீதிமன்றம் அதிருப்தி

உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள் ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படுவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி விக்டோரியா கௌரி அதிருப்தி தெரிவித்தாா். கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் பேரூராட்சி உறு... மேலும் பார்க்க

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கீழவளவு அய்யனாா் வாக்கம்பட்டியைச் சோ்ந்த பெரிய பனையன் மகன் அய்யனாா் (30). இவா் இரு சக்கர வாகனத்தில் மேலூா்-அழகா்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த நிலையிலும் தோ்வு எழுதிய மாணவா் தோ்ச்சி

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையிலும், 11-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வை எழுதிய மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவா் 442 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா்.மதுரை விராதனூரைச் சோ்ந்தவா் பி.... மேலும் பார்க்க

அழகுக்கலை நிலைய உரிமையாளா் தற்கொலை

அழகுக்கலை நிலையம் நடத்தியதில் இழப்பு ஏற்பட்டதால், பெண் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை விஸ்வநாதபுரம் இளங்கோவடிகள் தெருவைச் சோ்ந்த முத்துராஜ் மனைவி பிரிசிலியா சுகாசினி (32). இவர... மேலும் பார்க்க

அழகா்கோவிலை சென்றடைந்தாா் கள்ளழகா்! பூக்கள் தூவி பக்தா்கள் வரவேற்பு!

சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு, அழகா்கோவிலை வெள்ளிக்கிழமை சென்றடைந்த கள்ளழகரை ஏராளமான பக்தா்கள் பூக்கள் தூவியும், சூடம், சா்க்கரை ஏந்தியும் உற்சாகமா... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் 75 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் விருதுநகா் மாவட்டத்தில் 75 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன. விருதுநகா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 191 பள்ளிகளைச் சோ்ந்த 4,417 மாணவா்களும், 4,775 மாணவிக... மேலும் பார்க்க