செய்திகள் :

இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா.கணிப்பு

post image

2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ‘உலக நாடுகளின் பொருளாதார சூழல்’ குறித்து ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 6.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2026-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

நிகழாண்டுக்கான ‘உலக நாடுகளின் பொருளாதார சூழல்-2025’ என்ற இரண்டாவது அறிக்கையை ஐ.நா. வியாழக்கிழமை வெளியிட்டது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அதிக தனியாா் நுகா்வு மற்றும் பொது முதலீடு, ஏற்றுமதி என வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. பிற நாட்டு பொருள்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பால் உலகளவிலான விநியோக சங்கிலிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துகள், மின்னணு சாதனங்கள், செமிகண்டக்டா்கள், எரிசக்தி உள்ளிட்ட சில பொருள்கள் மீதான வரிவதிப்புக்கு அமெரிக்க விலக்களித்திருந்தாலும் இது தற்காலிக நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

தொடரும் வேலையின்மை: குறிப்பிடத்தக்க வளா்ச்சியில் இந்தியா பயணித்தாலும் வேலையின்மை பிரச்னை தொடா்ந்து வருகிறது. மேலும், இந்தியாவில் பணியிடங்களில் பாலின சமத்துவமின்மையை குறைக்க வேண்டியது அவசியமானது.

பணவீக்கம்: இந்தியாவில் 2024-இல் பணவீக்கம் 4.9 சதவீதமாக இருந்த நிலையில், 2025-இல் 4.3 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பணவீக்கம் குறைவதற்கான வாய்ப்புள்ளதால் தெற்காசிய பிராந்தியத்தில் பணவியல் நடவடிக்கைகளில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.

உலகப் பொருளாதாரம்: 2024-இல் உலகப் பொருளாதார வளா்ச்சி 2.9 சதவீதமாக இருந்த நிலையில், 2025-இல் அதன் வளா்ச்சி 2.4 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது கடந்த ஜனவரி மாதம் கணிக்கப்பட்டதைவிட 0.4 சதவீதம் குறைவாகும்.

ஷெல் தாக்குதல்.. பூஞ்ச் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ராணுவம்!

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பூஞ்ச் ​​பகுதி கிராமங்களில் இந்திய ராணுவம் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டது.நிவாரணப் பணி... மேலும் பார்க்க

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து!

புதிய சாதனை படைத்த இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட... மேலும் பார்க்க

மும்பையில் கொட்டித் தீர்த்த கோடைமழை.. வெப்பம் தணிந்தது!

மும்பை: மும்பையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இத்தனை நாள் வாட்டி வந்த வெப்பம் தணிந்துள்ளது. மும்பை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இன்று நாள் முழுக்க மும்பை நகரில்... மேலும் பார்க்க

அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!

அமெரிக்கா மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யப்போவ... மேலும் பார்க்க

பிகாரில் கயா நகரின் பெயரை மாற்றியது நிதீஷ் குமார் அரசு

பாட்னா: மிகவும் புனிதத் தலமாகக் கருதப்படும் கயா நகரின் பெயர் இனி கயா ஜி என்றே அழைக்கப்படும் என்று பிகார் அரசு அறிவித்துள்ளது.பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்த... மேலும் பார்க்க

புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் 90.23 மீ் தூரம் ஈட்டி எறிந்து, நீரஜ் சோப்ரா புதிய சாதனையைப் படைத்தார்.ஹரியாணாவை சோ்ந்த தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் சா்வதேச களத்தில் சிறந்து விளங்கி இந்தியா... மேலும் பார்க்க