செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் புதிதாய் 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கை! இலக்கை எட்டுமா பள்ளிக்கல்வித் துறை?

post image

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வரும்நிலையில், தற்போது வரையில் மாணவர் சேர்க்கை சுமார் 1.8 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

மாணவர்களின் நலன்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும்நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மார்ச் மாதத்திலேயே மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட முதல் 20 நாள்களிலேயே 14 வேலைநாள்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சேர்ந்துள்ளனர். இது கடந்தாண்டைவிட அதிகமாகும்.

கடந்தாண்டில் 3.34 லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்த நிலையில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை இலக்கை 5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறக்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் காணித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக (இன்று) தமிழகத்தில் ஒரு... மேலும் பார்க்க

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) தொடக்கி வைத்தார்.தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் பக்... மேலும் பார்க்க

மே 22ல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

அரபிக்கடல் பகுதியில் வரும் 22 ம் தேதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது மத்திய கிழக்கு கர்நாடகத்தை ஒட்டிய அரபிக்கடல... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே டிப்பர் லாரி மோதியதில் தாய், குழந்தை பலி!

சென்னை: சென்னை பாடி மேம்பாலம் அருகே, டிப்பர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணும் குழந்தையும் பலியான நிலையில், பெண்ணின் கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

சென்னை புறநகரில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னை புறநகர்ப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெய்யில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. தொடர்ந்து மே 28 வரை ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது மாலை 4 மணி வரைதிருவள... மேலும் பார்க்க