சத்தமில்லாமல் உயிரைக் கொல்லும் உயர் ரத்த அழுத்தம் - இளைஞர்களே உஷார்!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது மாலை 4 மணி வரை
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
