செய்திகள் :

தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்த டு பிளெஸ்ஸிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்!

post image

ஐபிஎல் தொடரில் மீதமிருக்கும் போட்டிகளில் விளையாடுவதற்காக டு பிளெஸ்ஸிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் இன்று (மே 17) முதல் மீண்டும் தொடங்குகிறது. பெங்களூருவில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இதையும் படிக்க: ஐபிஎல் 2025-இல் அடுத்த 10 நாள்கள் மிகவும் முக்கியமானவை..! முன்னாள் வீரர் பேட்டி!

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து, வெளிநாட்டு வீரர்கள் பலரும் மீண்டும் தங்களது அணிகளுடன் இணைந்து வருகின்றனர். தில்லி கேபிடல்ஸின் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்துள்ளனர்.

தில்லி கேபிடல்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் டோனோவன் ஃபெரைரா மீதமுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேக் ஃபிரேசர் மெக்கர்குக்குப் பதிலாக அணியில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க மீதமுள்ள 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் தில்லி கேபிடல்ஸ் உள்ளது.

இதையும் படிக்க: ஐபிஎல் கோப்பையை வெல்லும் கேப்டனுக்கு மதிப்பு கூடுகிறது: சுரேஷ் ரெய்னா

தில்லியில் நாளை (மே 18) நடைபெறவுள்ள போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வெல்லும்: நானும் உடனிருப்பேன் -ஏபி டி வில்லியர்ஸ்

ஐபிஎல் கோப்பையை விராட் கோலியுடன் கைகோர்த்து தூக்குவேன் என்று ஏபி டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானுடனான தீவிர போர்ப் பதற்றத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட... மேலும் பார்க்க

ஆர்சிபி - கேகேஆர் இடையேயான போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதம்!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையேயான போட்டிக்கு மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இல் அடுத்த 10 நாள்கள் மிகவும் முக்கியமானவை..! முன்னாள் வீரர் பேட்டி!

பிளே ஆஃப்ஸுக்கான போராட்டம் தீவிரமடைவது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 சீசன் மீண்டும்... மேலும் பார்க்க

சிஎஸ்கே ரசிகையை சீண்டிய ஆர்சிபி ரசிகர்கள்: ராபின் உத்தப்பா கண்டனம்

ஆர்சிபி ரசிகர்களின் மோசமான செயல்கள் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியது சமூக ஊடகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆர்சிபி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக வாக்குவாதங்கள் சண்டைகள் நிகழ்ந்த... மேலும் பார்க்க

ஐபிஎல் கோப்பையை வெல்லும் கேப்டனுக்கு மதிப்பு கூடுகிறது: சுரேஷ் ரெய்னா

இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 சீசன் மீண்டும் இன்றுமுதல் (மே.17) தொடங்குகின்றன.போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் முக்கியமான கடத்தின... மேலும் பார்க்க

மீதமுள்ள போட்டிகளுக்கான பயிற்சியை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை: கேகேஆர் வீரர்

ஐபிஎல் மீண்டும் தொடங்கும் எனத் தெரிந்ததால் நாங்கள் பயிற்சியை ஒருபோதும் நிறுத்தவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபி... மேலும் பார்க்க