செய்திகள் :

``டாஸ்மாக் ரெய்டு பயத்தில், அதிமுக-வினர் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஏவல்..'' - இபிஎஸ் காட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் குறித்து அவரின் சொந்தக் கிராமமான `சேவூர் மக்கள்’ என்ற பெயரில், கடந்த 2022-ம் வருடமே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 12 பக்கப் புகார் கடிதம் பறந்தது.

அதில், ``2016 மற்றும் 2021 தேர்தல்களின்போது, வேட்பு மனுக்களுடன் சேவூர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த சொத்து மதிப்பினை ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மைத் தெரியவரும். ராமச்சந்திரனின் சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்திருக்கிறது’’ என்கிற குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருந்தன.

சேவூர் ராமச்சந்திரன்

அதையடுத்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரின் மனைவி மணிமேகலை, இரு மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிந்திருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் ஆரணியில் இருக்கின்ற சேவூர் ராமச்சந்திரனின் வீடு மற்றும் அவரின் இரு மகன்கள் வசித்துவரும் வீடுகளிலும் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்

ரெய்டு நடப்பதை அறிந்த அ.தி.மு.க-வினர் ராமச்சந்திரன் வீட்டு முன்பு குவிந்து, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராகவும், ஆளும்கட்சியான தி.மு.க-வைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இந்த சோதனைக் குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதாவது, ``அன்புச் சகோதரர் சேவூர் ராமச்சந்திரனை குறிவைத்து ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி

டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ரெய்டுகள் ஸ்டாலினுக்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க-வின் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியிருக்கிறார்.

டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து மக்களிடம் எப்போது மௌனம் கலைக்கப் போகிறார்? பின்னப்பட்ட புனைக்கதைகளால் போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அ.தி.மு.க இயக்கத்தை அசைத்துக்கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொள்வோம். வெல்வோம்’’ எனக் கூறியிருக்கிறார்.

Trump : ட்ரம்ப்பின் புதிய 5% வரி அறிவிப்பு - இந்தியர்களை பாதிக்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்போது என்ன அறிவிப்பாரோ என்ற பீதியில் தான் உலக நாடுகள் இருக்கின்றன என்று கூட கூறலாம். அவர் அதிபராக பதவியேற்றதில் இருந்து வரிசையாக அறிவிப்புகளை அறிவித்து கொண்டே வருகிறார். அவற்... மேலும் பார்க்க

'முதியோர் இருக்கையில் அமரக் கூடாது' - முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம்!

சென்னை வண்டலூர் அரசு பேருந்து ஒன்றில் முதியவர் ஒருவர் பயணத்திற்காக ஏறியிருக்கிறார். அப்போது அவர் முதியோர் இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரை அந்த இடத்தில் இருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இறங்க சொல்லும் ... மேலும் பார்க்க

திருப்பூர்: குடிநீர்த் தொட்டியில் மலம்? விசாரணையில் இறங்கிய அதிகாரிகள்; இருவர் கைதின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டத்தின் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதேபோன்று திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியி... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் ஐயங்கொல்லை மக்கள்; கோரிக்கைக்கு செவி சாய்க்குமா அரசு?

திருப்பத்தூர் அருகே உள்ள ஆண்டியப்பனூர் பஞ்சாயத்தில் 29 கிராமங்களில் ஒன்றான ஐயங்கொல்லையில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காப்புக்காட்டில் அமைந்த இந்த கிராமத்திற்கு ... மேலும் பார்க்க

காட்பாடி சாலையில் செயல்படாத சிக்னல்கள்; மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்களா அதிகாரிகள்?!

வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநில பகுதியை இணைக்கும் பிரதான சாலையாக காட்பாடி செல்லும் சாலை இருக்கிறது. இந்நிலையில் வேலூரில் இருந்து காட்பாடி ரயில் நிலையம் செல்வதற்காக மக்கள் அதிகம் பயன்படுத்தும்... மேலும் பார்க்க

ஊட்டி: ``உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க'' - மலர் அரியணையில் அமர்ந்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்

நீலகிரி கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127 - வது மலர் கண்காட்சி இன்று காலை (15- 05 - 2025 ) தொடங்கி மே மாதம் 25 - ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஊட்டியில் முதல்வர் ... மேலும் பார்க்க